இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் மகள்களை பார்த்திருக்கிறீர்களா...? அதுவும் இந்த “பிரபலங்கள்” தான்..!
சென்னை: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். அவர்களோடு கே.எஸ் ரவிக்குமார் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இயக்குனராகவும், நடிகராகவும் பலருக்கும் தெரிந்த கே.எஸ் ரவிக்குமார் 3 பெண் குழந்தைகளின் தந்தையாக தன்னுடைய மகள்களை நல்ல நல்ல நிலமைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருடைய மகள்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
கே.எஸ் ரவிக்குமாருடைய திரைப்படங்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் அதிகமானவை கே.எஸ் ரவிக்குமார் உடைய திரைப்படங்களாகவே இருக்கும். இவர் இயக்கும் திரைப்படத்தில் இவரும் கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலரையும் தன்னுடைய திரைப்படத்தால் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடையும் வகையில் செய்து சாதனை படைத்த கே.எஸ் ரவிக்குமார் இப்போது சின்னத்திரையிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். வெள்ளி திரையில் தான் செய்யாத சாதனையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஜொலித்த கே.எஸ் ரவிக்குமார் இப்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் "அடுத்த கதாநாயகி யார்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில் கே.எஸ் ரவிக்குமார் அவருடைய பேர குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை அவருடைய மகள்கள் பகிர்ந்து இருக்கின்றனர். அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கே.எஸ் ரவிக்குமார் உடைய மனைவியின் பெயர் கற்பகம் இவருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

அதில் அவருடைய ஒரு மகளின் பெயர் மல்லிகா. இவர் பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் ஒருமுறை சூரியன் எஃப் எம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகின்றார். அப்போது லைஃப் கோச்சிங் பயணம் குறித்து அதிகமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் எனக்கு லாக் டவுன் சமயத்தில் குழந்தை பிறந்தது.
அந்த சமயத்தில் சரியாக எதுவும் செய்ய முடியவில்லை. டெலிவரி, பிரசவத்திற்கு பிறகு மன அழுத்தம் கோவிட் பயம்... இப்படி பல்வேறு காரணங்களால் நான் உடைந்து போய் இருந்தேன். ஆனாலும் அந்த நேரத்தில் என்ன நம்பி ஒரு குழந்தை இருக்கிறதாலும், இனி யாருடைய ஆறுதலையும் எதிர்பார்த்து நாம வாழக்கூடாது நினைத்தேன்.

அப்போது நான் ஏதாவது செய்யணும்னு முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கும்போது எனக்கு இந்தியாவிலே சிறந்த லைஃப் கோச்சுகளில் ஒருவரான பூஜா என்பவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்த பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறியது. மன அழுத்தம், டென்ஷன், பானிக் இருந்ததிலிருந்து மீண்டு பாசிட்டிவாக மாறினேன்.
என்னுடைய நிலைமை பார்த்து தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என்னுடைய வாழ்க்கையே மாறி இருக்கிறது. நானும் நன்றாக பேசுகிறேன். அதனால் என்னுடைய அனுபவங்களை எல்லாம் வைத்து நான் ஏன் ஒரு லைஃப் கோச்சாக முடியாது என்று நினைத்து தான் இந்த பாதையில் வந்தேன். இப்போது கிட்டதட்ட 800 மேற்பட்ட தமிழ் பெண்களின் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதுபோல கே.எஸ் ரவிக்குமாரின் இன்னொரு மகளான ஜனனி ரவிக்குமார் இவர் ஒரு பிட்னஸ் ஆர்வலராகவும் சொந்தமாக தொழில் செய்தும் வருகிறார். இன்னொரு மகள் ஜஸ்வந்தி அவர் ஒரு டாக்டராக இருக்கிறார். சென்னையில் தற்போது தான் அர்மோரா என்ற டெர்மடாலாஜி கிளினிக்கை திறந்து வைத்திருக்கிறார். அவருடைய கணவர் அரவிந்த் கூட மருத்துவர் தானாம்.

இப்படியாக நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் கேஎஸ் ரவிக்குமார் தன்னுடைய மகள்களை நடிகையாக மாற்றாமல் அவர்களுடைய திறமையின் அடிப்படையிலே அவர்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறார். இது பல பெண்களுக்கும் முன்னுதாரணம் என்றும் ரசிகர்கள் பலரும் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் அவருடைய மகள்களை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கே எஸ் ரவிக்குமார் அவருடைய மகள்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா? கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications