சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி! எதிர்நீச்சலுக்கு போட்டி வந்தாச்சு.. புது “அப்டேட்” கொடுத்த திருமுருகன்
சென்னை: இயக்குனர் திருமுருகன் இயக்கும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் நிலையில் அவர் கடைசியாக "கல்யாண வீடு" என்ற சீரியலை இயக்கி நடித்து இருந்தார். அதற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் திருமுருகன் அவருடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த புத்தாண்டில் புதிய படைப்பு வரவிருக்கும் தகவலையும் ஷேர் செய்து இருக்கிறார்.

அந்த வகையில் சமீப காலமாகவே சீரியலில் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக இப்போது உள்ள பெரும்பாலான சீரியல்களில் கதாநாயகன் பெரிய பணக்கார வீட்டு பையனாக இருக்கிறார். அம்மா பேச்சை தட்டாத நபராக இருக்கிறார். ஆனால் கதாநாயகி ரொம்பவும் கஷ்டப்படுகிற பெண்ணாக இருக்கிறார்.
எதிர்பார்க்காத சூழ்நிலையில் கதாநாயகன் கதாநாயகியை கல்யாணம் செய்கிற மாதிரி இருக்கிறது. ஆனால் இருவரும் ஆரம்பத்தில் திருமணத்தில் விருப்பமில்லாமல் திருமணம் செய்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த கதாநாயகனை ஒருதலையாக காதலிக்கும் அத்தை பொண்ணு அல்லது மாமன் பொண்ணு ஒருவர் இருப்பார். இந்த கதாநாயகனும் கதாநாயகியும் சேரவிடாமல் அவர் தொடர்ந்து பிரச்சனைக்கு மேலே பிரச்சனை பண்ணிக் கொண்டு இருப்பார்.

அதுபோல தனக்கு பிடிக்காத ஏழை மருமகளோடு தன்னுடைய மகன் சேரக்கூடாது என்று மாமியார் ஒரு பக்கம் வில்லத்தனம் செய்து கொண்டிருக்கிறார். இப்படித்தான் பல சீரியல்கள் இருக்கிறது. இது சின்னத்திரை ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
அதே நேரத்தில் ஒரு சில இயக்குனர்களின் சீரியல் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனித்துவத்தோடு வரவேற்பை பெற்றுவிடும். அந்த வகையில் ஒருவர் தான் இயக்குனர் திருமுருகன். இயக்குனர் திருமுருகன் தான் இயக்கி நடித்த நாதஸ்வரம் சீரியலில் கின்னஸ் சாதனையை படைத்திருந்தார். அது பலருக்கும் தெரிந்ததாக தான் இருக்கும்.
அதாவது நாதஸ்வரம் சீரியலில் ஒரு எபிசோடில் தொடர்ச்சியாக 23 நிமிடங்கள் 25 வினாடிகள் வரை நீண்ட தொடர்ச்சியான கேமரா ஷாட் செய்ததற்காக அவர் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இப்படி புதியதாக பல விஷயங்களை தன்னுடைய சீரியலில் கொண்டு வரும் திருமுருகன் திரைப்படங்கள், குறும்படங்கள், சீரியல்கள் என்று பலவற்றை இயக்குகிறார்.
அதிலும் அவர் இயக்கிய மெட்டி ஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. ஆனால் கல்யாண வீடு சீரியலுக்கு பிறகு திருமுருகன் எந்த சீரியலையும் இயக்கவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் அவர் சீரியல் எப்போது வரும் என்று எதிர்பார்த்தனர். இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருமுருகன் அவருடைய" Thiru tv" என்ற யூடியூப் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இந்த புத்தாண்டில் புதிய படைப்பு வரவிருக்கும் தகவலையும் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த தகவலை பார்த்ததும் ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டி சீரியல் விரைவில் வரப்போகிறது என்று கமெண்ட்களை வெளியிட்டு வருகிறார்கள். காரணம் எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் அதிகமான பாசிட்டிவ் கருத்துக்களை பெற்று வந்த நிலையில் இப்போது சமீபமாக சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications