50 வயதாகியும் திருமணம் செய்யாத ரஜினியின் "தங்கை".. வாழ்வில் இப்படி ஒரு சோகமா? ரசிகர்கள் வேதனை
சென்னை: 50 வயதாகியும் இந்த நடிகை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாரே ஏன் தெரியுமா?
சினிமா துறையில் நடிகர், நடிகைகள் 50 வயதை கடந்தும் கூட திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் திருமணமானவுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டு சிங்கிளாகவே காலத்தை கடத்துகிறார்கள்.

இதெல்லாம் சகஜம் என இருந்தாலும் நம் அபிமான நடிகரோ, நடிகையோ இப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது உண்மையில் வேதனையை தரக் கூடிய விஷயமாகும்.
அந்த வகையில் நடிகைகளில் அனுஷ்கா, கிரண், தபு, பூனம் பஜ்வா, திரிஷா, இலியானா, டாப்ஸி, சுருதிஹாசன், நக்மா, கோவை சரளா, வரலட்சுமி சரத்குமார் , ஆண்ட்ரியா உள்ளிட்டோர் திருமண வயதை தாண்டி சிங்கிளாகவே இருந்து வருகிறார்கள். அப்படி 50 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர் சித்தாரா.
கே பாலசந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தார். அவர் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அவருடைய மகனாக விஜய் சாரதி நடித்திருந்தார். புது வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். செக்ஸியாக நடிக்காத நடிகை, புடவை சுடிதார், மிடி அணிந்து நடிப்பார்.
படையப்பா படத்தில் இவர் கம்பேக் கொடுத்ததை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கேரளாவை சேர்ந்தவர் சித்தாரா. இவர் தற்போது 50 வயதாகியும் சிங்கிளாகவே இருக்கிறார். சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒருவரை இவர் காதலித்ததாகவும் அந்த காதல் கைகூடாததால் அந்த நினைப்பிலேயே சித்தாரா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் தெரிகிறது.
மேலும் இவர் தன் வாழ்வின் துவக்கத்திலேயே திருமணம் செய்து கொளள கூடாது என முடிவு செய்திருந்ததால் அந்த முடிவில் இருந்து அப்படியே இருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் தந்தையின் பிரிவால் சித்தாரா மிகவும் மனவேதனையில் இருப்பதாகவும் தெரிகிறது. இவர் பராசக்தி, கவரி மான்கள் உள்ளிட்ட தமிழ் தொலைகாட்சி தொடர்களிலும், மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications