அழகம்மையை அழ வைக்காதீங்கடா.. பாவம் என்ன செய்வா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் ரேவதி அழகம்மையா மனசை அள்றாங்க. குடும்பமே அவங்களை கொண்டாடுவது பார்க்க நல்லாத்தான் இருந்துச்சு.
இடையில் என்னன்னவோ நடந்துவிட, இப்போ அழகம்மைக்கு உடம்பு சரியில்லை. இருதயத்தில் கோளாறு. இதை மூத்த மருமகள், மகனிடம் மட்டுமே சொல்லும் அழகம்மை, இன்னும் கணவனிடம் கூட சொல்லலை.
ரெண்டாவது மகன் மகேஷ் பொண்டாட்டி பூர்ணா பக்கம் சேர்ந்து தாய், தந்தையை உதாசீனப்படுத்தறான். அம்மா, அப்பா கல்யாண நாளன்று கூட அவர்களிடம் ஆசி வாங்காமல், உடனிருந்து சேர்ந்து சாப்பிடாமல், பொண்டாட்டியுடன் வெளியில சாப்பிட்டு வந்து அம்மாவை மதிக்காமல் இருக்கான்.

அம்மா அப்பா
மகேஷ் தன் மனைவி பூர்ணாவுடன், அவளின் அம்மா அப்பாவைத் தேடி அலைகிறான். பூர்ணாவை தனது வீட்டார் அவமானப்படுத்தி வருகின்றனர் என்று குடும்பத்தை விட்டு ஒதுங்கி பொண்டாட்டியுடன் மட்டும் நேரத்தை செலவிடுகிறான்.

அழுகை
இப்படி ஆசையா வளர்த்த மகனும், மருமகளும் குடும்பத்தோடு ஒட்டாமல் இருக்கறதை நினைச்சு அழகு ரொம்ப வருத்தப்படறாங்க. அடுத்த வருஷம் கல்யாண நாளுக்கு நான் உயிரோட இல்லேன்னா என்னடா பண்ணுவேன்னு அழகு அழுதபடி கேட்க, அனைவரும் அதிர்ந்துவிட, மகேஷ் அதிராமல் மனைவியுடன் நிற்கிறான்.

அழகு
அழகு அழாத... இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாய் போயிரும்னு ரவி அப்பா மனைவியை சமாதானப்படுத்த, குடும்பமே அழாதீங்கம்மா... நீங்க அழுதா எங்களால தாங்க முடியாதும்மான்னு ஆறுதல் சொல்றாங்க.

பித்தல்லவா
பெத்த மனம் பித்தாச்சே.. குருவிக்கூட்டுல கல்லெறிஞ்சது போல, நல்லா இருந்த குடும்பத்தில் கோர்ட், கேஸ், நோட்டீஸ், போலீஸ்னு வந்தா, குடும்பம் குடும்பமா இருக்குமா? இதுதான் கவலை அழகம்மைக்கு.
இவருக்காக சீரியல் பார்க்கறவங்க.. ஐயோ ஏண்டா பெத்த தாயை இப்படி அழுகாச்சி அழ வைக்கறீங்கன்னு வாய் விட்டு புலம்பறாங்க. ஸ்டார் காஸ்ட் எவ்ளோ வேல்யூ பாருங்க...












Click it and Unblock the Notifications