ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை கண்ணீரோடு வெளியிட்ட புகைப்படம்.. இதனால்தான் எப்படி ஒரு திடீர் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து வரும் நடிகை சுவாதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீரோடு தான் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு சுவாதி something end soon என்று பதிவு வெளியிட்டு இருப்பதால் சீரியல் முடிவுக்கு வருகிறதா? அல்லது இவருடைய கேரக்டர் முடிவுக்கு வருகிறதா? என்று கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்திருக்கிறது.

Eeramana rojave serial serial Actress Swathi post in something end soon

ஈரமான ரோஜாவே சீரியலில் விறுவிறுப்பான கதைக்களம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று சுவாதி வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் அக்கா காதலித்த நபரை தங்கைக்கும், தங்கை காதலித்த நபரை அக்காவுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து வைத்த நிலையில் அது குறித்து அதிகமான சர்ச்சைகள் ஆரம்பத்திலே தொடங்கி இருந்தது. அதை தொடர்ந்து இந்த சீரியல் ஒருவழியாக ரசிகர்களுக்கு பிடிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் திடீரென்று இந்த சீரியல் நேரம் மாற்றி ஒளிபரப்ப தொடங்கியிருந்தனர்.

தற்போது இந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் நன்றாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியல் இடையில் கொஞ்சம் டல்லடிக்க தொடங்கி இருந்தது. சீரியலில் கதைக்களம் திடீரென்று மாற்றப்பட்டு இருந்த நிலையில் அது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இந்த சீரியலில் இயக்குனர் இறப்பு புதிய இயக்குனர் என பல மாற்றங்கள் நடந்து விட்டது.

சீரியலின் சுவாரசியத்திற்காக அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் பிறகு ரொமான்ஸ் என்றே இந்த கதையை ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தனர். அதுவும் பிரியா கேரக்டரில் நடித்து வரும் சுவாதிக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.

Eeramana rojave serial serial Actress Swathi post in something end soon

இந்த நிலையில் சுவாதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் Something end soon என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இதனால் இந்த சீரியல் மொத்தமாக முடிய போகிறதா? அல்லது சீரியலை விட்டு இவர் விலகப் போகிறாரா? அதனால் தான் இப்படி ஒரு பதிவு வெளியிட்டாரா? என்று குழப்பத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பிரியா மற்றும் காவியா என கதாநாயகி இருவருடைய திருமணமும் குழப்பத்தில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இந்த சீரியலில் கதாநாயகியின் சகோதரியின் திருமணமும் அதேபோலவே குழப்பத்தில் நடத்தி வைத்தனர். காதலித்த நபரை விட்டு விட்டு இன்னொரு நபருக்கு கட்டாய திருமணம் நடத்தி வைப்பது இந்த சீரியலில் வாடிக்கையாக இருக்கிறது என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலில் கதாநாயகி திடீரென்று வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+