இது அசிங்கமா இல்லையா? குணசேகரிடம் கேள்வி கேட்ட கதிர்.. வசுவால் வந்த பிரச்சனை.. பரபரப்பான திருப்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 7-ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அனைவர் முன்னாடியும் என்னால் கையெழுத்து போட முடியாது என கதிர் பிரச்சனை செய்கிறார்.
தன்னை கலாய்த்து அவமானப்படுத்திய வசுவால் நந்தினி கண்கலங்குகிறார்.

நிச்சயதார்த்தம்:
எதிர்நீச்சல் சீரியலில் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் நிகழத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ஆதிரை கல்யாணம் நடக்குமா? நடக்காதா என்று பெரும் பரபரப்பு எதிர்பார்ப்பும் இருக்கும் நிலையில், தற்போது ஆதிரை நிச்சயதார்த்தம் வரை வந்திருக்கிறது. அனைவரும் மண்டபத்திற்கு வந்திருக்கும் நிலையில் அங்கே புதியது புதியதாக பிரச்சனைகள் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கதிர் மற்றும் குணசேகரன் இடையே மீண்டும் வாக்குவாதம் தொடங்குகிறது.
கோபத்தில் இருக்கும் கதிர்:
ஏற்கனவே குணசேகரன் மற்ற தம்பிகளை போலவே கதிரையும் வீட்டில் வைத்து அவமானம் செய்ததால் குணசேகரனோடு இனி எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று கை எடுத்து கும்பிட்டு தனக்கு தன்னுடைய நிலைமையை புரிய வைத்துவிட்டிங்க என்று சென்டிமென்டாக பேசி கதிர் விலகி இருந்தார். ஆனால் கதிர் இல்லாமல் நான் மண்டபத்திற்கு வர மாட்டேன். நீ இல்லாமல் நான் இந்த கல்யாணத்திற்கு எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று வீட்டில் ஸ்ட்ரைக் செய்து குணசேகரன் கதிரை மீண்டும் மனம் மாற வைத்து மண்டபத்திற்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

மறைக்கும் குணசேகரன்:
ஆரம்பத்திலேயே ஆதிரையின் திருமண விஷயத்தில் தான் போடும் பிளான் பற்றி கதிர் மற்றும் ஞானத்திடம் ரகசியமாக சத்தியம் வாங்கி வைத்திருந்த குணசேகரன் கரிகலன் குடும்பத்தோடு தான் செய்திருக்கும் ரகசிய ஒப்பந்தத்தை பற்றி இப்ப வரைக்கும் வாய் திறக்காமல் இருக்கும் நிலையில், தன்னால் தன்னுடைய பெயரில் இருக்கும் கம்பெனியை ஆதிரையின் திருமணத்திற்கு எழுதிக் கொடுக்க முடியாது என்று கதிர் பிடிவாதம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரை சமாதானம் செய்து வைக்க பார்க்கிறார்.

இன்றைய ப்ரோமோ:
இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் மணப்பெண் அறையில் இருக்கும் நந்தினியை வசு எதார்த்தமாக கிண்டல் செய்ய, இந்த வீட்டில் இருக்கிறவங்க தான் இப்படி அசிங்கப்படுத்துறாங்கன்னு நெனச்சிட்டு இருக்கிறேன். ஆனால் இவளும் இப்படி பேசுறா இது கஷ்டமாக இருக்கு என்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். அடுத்ததாக அறையில் இருக்கும் குணசேகரனிடம் கதிர் கோபமாக, எல்லார் முன்னாடியும் கையெழுத்து போட சொன்னா அசிங்கமா இருக்காதா? என்று கோபத்தோடு கேட்க, எவன் அசிங்கப்படுத்தினானோ அவன் முன்னாடி நெஞ்ச நிமித்திக்கிட்டு நிக்குறதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்யணும் என்று சாமர்த்தியமாக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று இரவு எப்படியும் ஒரு பஞ்சாயத்து இருக்கப் போகிறது என்பது இன்றைய ப்ரோமோவில் தெரிகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications