ஜான்சி ராணியோடு குணசேகரன் போட்டிருக்கும் பிளான்.. அப்பத்தா வைத்த ஆப்பு.. ஜனனிக்கு வந்த சிக்கல்
ஆதிரையின் திருமண விஷயத்தில் அப்பத்தா குணசேகரின் டீலிங்கிற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆதிரையின் திருமண விஷயத்தில் டபுள் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
குணசேகரன் நம்புகிற மாதிரியே அப்பத்தாவும் அவருடைய வழியிலேயே அவருக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.

ஜனனிக்கு வந்த சிக்கல்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு புதியதாக வேலை கிடைத்திருக்கும் நிலையில் பணத்தேவை ஏற்படுகிறது. ஏற்கனவே அப்பத்தாவின் சொத்து ஆதிரை திருமண விஷயத்திற்கு கொடுக்க சம்மதித்து விட்டார் என்று நந்தினியும் ரேணுகாவும் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அப்பத்தா தன்னுடைய சொத்து விஷயத்தில் எடுத்திருக்கும் முடிவு மற்றும் செய்து வைத்திருக்கும் செயல்களை பற்றி வெளியே சொல்லாமல் அது என்னுடைய இஷ்டம் நான் உங்களுக்கு எல்லாம் மாரல் சப்போர்ட் தான் கொடுக்கிறேன் என்று சொன்னேனே தவிர யாருக்கும் பைனான்ஸ் சப்போர்ட் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் தற்போது நந்தினி ஜனனி மற்றும் கதிர் தங்களுக்கு தேவைப்படும் பணம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

ரகசிய சந்திப்பு
எதிர்நீச்சல் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. குணசேகரன் தனது தம்பிகளிடம் ஆதிரைக்கு அருனுடன் திருமணம் செய்து வைக்கப் போகிறேன். அவனுடைய சொத்தை எல்லாம் நாம் புடுங்க வேண்டும் என்று பிளான் போட்டு அவர்களிடம் ஞானம் மற்றும் கதிரிடம் சத்தியம் வாங்குகிறார். ஆனால் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனிடம் நான் அப்பத்தாவிடம் இருக்கும் சொத்தை எழுதி வாங்கிவிட்டு அப்பத்தாவை விரட்டிவிட்டு கரிகாலனிற்க்கு தான் ஆதிரையை திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று ரகசியமாக சந்தித்து பேசுகிறார்.

அப்பத்தாவின் முடிவு
இந்த நிலையில் இன்றைய பிரமோ வில் குணசேகரன் அப்பதாவை தேடி கூப்பிட்டுக் கொண்டிருக்க, ஜனனி அப்பதா மாடியில் இருக்கிறார் என்று சொல்கிறார். மாடிக்கு வந்த குணசேகரன் அப்பத்தாவை பார்த்து என்ன அப்பத்தா உன்னுடைய பேத்தி கல்யாணத்தை அவ ஆசைப்பட்ட மாதிரி நடத்திடுவோமா? இன்னும் யோசிச்சுட்டு தான் இருக்கியா? என கேட்க. அப்பத்தா எதுவும் பேசாமல் பார்த்தபடியே நிற்க சரி நீ யோசி என்று குணசேகரன் கிளம்புகிறார். அதற்கு அப்பத்தா தான் நான் முடிவெடுத்து விட்டேன் என்று சொல்கிறார்.

ஜனனி என்ன சொல்லப் போகிறார்
அடுத்ததாக உங்க ரத்த பாசத்தை காட்டி புட்டிங்களே நாங்க உங்களுக்கு என்ன செஞ்சோம் என்று நந்தினியும், ரேணுகாவும் அழுதபடியே அப்பத்தாவிடம் பேசிக்கொண்டு கிளம்புகின்றனர். அங்கே ஜனனி மற்றும் சக்தி இருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் உங்களுக்கு ஏதாவது சொல்லனுமா? என்று அப்பத்தான் கேட்கிறார். இந்த நிலையில் தங்களுக்கு ஏற்படும் பணத்தேவையை குறித்து ஜனனியும் சக்தியும் பேச இருக்கிறார்களா? அல்லது வீட்டில் நடக்கும் பிரச்சனையை பற்றி பேச இருக்கிறார்களா? என்பது இன்றைய எபிசோடில் தெரியலாம்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications