ஜனனியிடம் உதவிக்கு வந்த குணசேகரன்.. அப்பத்தாவால் கிடைத்த அவமானம்.. தொடங்கிய புது பிரச்சனை
குணசேகரன் ஆதிரையின் திருமண விஷயத்தில் ஜனனியின் அறிவுரையை கேட்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 18 ஆம் தேதிக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது.
குணசேகரன் தனது சகோதரிக்காக அவளுக்கு பிடித்த திருமணத்தை செய்து வைக்கப் போகிறேன் என்று சொல்லி அப்பத்தாவிடம் அசிங்கப்படுகிறார்.
இதுவரைக்கும் ஜனனியின் பேச்சை கேட்காத குணசேகரன் முதலில் எனக்கு அறிவுரை சொல்லி இருக்கலாம் என ஜனனியிடம் கூறுகிறார்.

குழப்புகிறாரே குணசேகரன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பல எதிர்பாராத திருப்புங்கள் நடைபெற்று வருகிறது. ஆதிரையில் திருமண விஷயத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எகிரி கொண்டிருக்கிறது. குணசேகரன் அப்பாத்தாவிடம் 40% ஷேர் தந்தால் ஆதிரைக்கு காதலிக்கும் அருணுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று கூறிக்கொண்டு ஜான்சிராணி இடம் ஆதிரைக்கு கரிகாலன் ஓடு தான் திருமணம் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்று சத்தியமும் செய்து வீடியோவாக வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.

திருமணம் யாரோடு
ஆனால் சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்திடம் ஆதிரைக்கு எஸ் டி ஆர் தம்பியோடு திருமணம் செய்து வைப்பதற்கு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களிடமும் சத்தியம் வாங்கி இருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது ஆதிரைக்கு யாரோட திருமணம் குணசேகரன் என்ன பிளான் வெச்சி இருக்கிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அப்பத்தாவின் மாஸ்டர் பிளான்
இது ஒரு பக்கம் இருக்க நான் குணசேகரனுக்கே அப்பத்தா என்று சொல்லும் வகையில் குணசேகரனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புது பிளான் வைத்திருக்கிறார். வெளியில் சென்று ஏதோ வேலைகளை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அப்பத்தா வீட்டில் இருக்கும் நந்தினி மற்றும் ரேணுகாவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பல செயல்களை செய்து கொண்டிருக்கிறார். குணசேகரனுக்கு 40 % எழுதி தருகிறேன் என்று வேற சொல்லி இருக்கும் நிலையில் அப்போ நந்தினி மற்றும் ரேணுகாவின் நிலைமை இனி அவ்வளவுதானா? அவர்களுக்கு அப்பத்தாவால் உதவி செய்ய முடியாதா? என்று எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த அவமானம் தேவையா
இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் குணசேகரனிடம் அப்பத்தா எஸ் டி ஆர் வீட்டில் போய் முறைப்படி நாம பேச வேண்டும் என்று சொல்ல, அதற்கு கதிர் நாம யாருகிட்டயும் போய் இறங்கி போகணும்னு அவசியம் இல்லை என்று சொல்கிறார். அதற்கு குணசேகரன் யாருக்காக இறங்கி போகிறோம். இந்தா நிற்க்கிறாளே நம்ம கூட பிறந்தவள். அவளுக்காக தானே என்று சொல்ல, கூடப்பிறந்தவளுக்காக விட்டுக் கொடுக்கல குணசேகரா 40% ஷேருக்காக விட்டுக் கொடுக்கிற என்று கூறுகிறார். பிறகு அனைவரும் காரில் வெளியே கிளம்பி போகும் போது எல்லா நேரமும் ரொம்ப விவரமா பேசிக்கிட்டு இருப்பியே, இதை யோசிக்க மாட்டியா? என்று குணசேகரன் ஜனனி இடம் கேட்க அதற்கு ஜனனி பேசணும்னு முடிவு எடுத்தவங்க நீங்க, என்னை கேட்டா எப்படி என்று பதில் கொடுக்கிறார்.












Click it and Unblock the Notifications