ஜீவானந்தம் பற்றி ஜனனிக்கு தெரிய வந்த உண்மை.. கோபத்தில் ஞானம்.. பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா கண் முழித்து ஜனனியிடம் பேசி இருக்கிறார்.
ஜனனியிடம் அப்பத்தா ஜீவானந்தா வந்தானா என்று கேட்க, ஜனனி யார் அந்த ஜீவானந்தம் என்று அப்பத்தாவிடம் கேள்வி கேட்கிறார்.
ரேணுகா அழுது கொண்டிருந்த நிலையில் ஞானம் கேள்வி கேட்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணம் நிகழ தொடங்கி இருக்கிறது. அப்பத்தா கண் முழித்து தான் சொத்து விஷயத்தில் செய்து வைத்திருக்கும் செயலை பற்றி சொல்ல வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
அது இப்போது நடக்க தொடங்கி இருக்கிறது. ஜனனி யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவை போய் பார்க்க, அப்போது அப்பத்தா ஜனனியிடம் ஜீவானந்தா வந்தானா என்று கேட்க, யார் அந்த ஜீவானந்தம் சொல்லுங்க அப்பத்தா என்று ஜனனி கேட்க அது பற்றி அப்பத்தா ரகசியமாக பேசுகிறார்.
அடுத்ததாக ரேணுகா அழுது கொண்டிருக்கிறார். வீட்டில் அனைவரும் இருக்கும்போது அப்போதுதான் ஞானம் அங்கே வர ஏன் ரேணுகா அழுதுகிட்டு இருக்க? என்ன ஆச்சு சொல்லு என்று கேட்க, அங்கு இருக்கும் ஜனனி சொல்லுங்க அத்த அவர்தான் கேட்கிறார் இல்ல, நீங்க சொன்னதை கேட்டு அவர் அவங்க அண்ணன் கிட்ட கேள்வி கேட்கிறாரா என்று பார்ப்போம் என்று சொல்கிறார்.
இனி ரேணுகாவை குணசேகரன் அவமானப்படுத்தியதற்கு ஞானம் கேள்வி கேட்பாரா ?என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் ஜீவானந்தம் பற்றி அப்பத்தா ஜனனியிடம் என்ன சொன்னார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில எபிசோட்டில் ஜனனி ஜீவானந்தத்தை வீட்டிற்கு கூட்டி வர இருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கதிர் யாரிடமாவது செமையா அடி வாங்கினால் சந்தோஷமாக இருக்கும் என்று கொதித்து போய் தொடர்ந்து கமெண்ட் அனுப்பி வருகிறார்கள். அதுபோல இன்றைய எபிசோட்டில் யார் யாரை அடிக்கிறார்கள் என்று பார்ப்போம் என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் ஞானம் ஒரு அடியாவது திரும்பி அடிக்கணும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட் காண இரண்டு பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் தரமான சம்பவங்கள் அடுத்தடுத்த பிரச்சனைகளும் இருக்கிறது என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஜனனி இப்போது பேசிக்கொண்டு இருப்பது போல இன்றைய எபிசொட்டிலும் தைரியமாக பேசி குணசேகரின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications