எதிர் நீச்சலில் வெளி வரும் உண்மை..குணசேகரனுக்கு கிடைத்த ஏமாற்றம்..கரிகாலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனனியை தொடர்ந்து ரேணுகாவும் குணசேகரனை எதிர்த்து பேச தொடங்கி இருக்கிறார்.

வீட்டு மருமகள்கள் எல்லோரும் சத்தியம் செய்து தர வேண்டும் என்று குணசேகரன் விதண்டாவாதம் செய்கிறார்.

அருண் இதே ஊரில் தான் இருக்கிறார் என்பது போட்டோ மூலமாக கரிகாலனுக்கு தெரிய வருகிறது.

Ethirneechal serial 2023 May 24th promo and Episode Highlights

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மே 24ம் தேதிக்கான எபிசொட்டின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் குணசேகரன் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணத்தில் எங்களால் எந்த பிரச்சனையும் வராது என்று வீட்டில் இருக்கும் அனைவரும் சத்தியம் செய்து தர வேண்டும் என்று கேட்கிறார்.

குலசேகரனுக்கு எதிராக ரேணுகா நாங்க எதற்கு உங்களுக்கு சத்தியம் செஞ்சு தரணும் என்று பதில் கேள்வி கேட்க வீட்டில் இருக்கும் வேலைக்காரர்கள் விசாலாட்சி என அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். குணசேகரன் அப்படியா என்பது போன்று தலையை ஆட்டிக்கொண்டு நிற்கிறார்.

Ethirneechal serial 2023 May 24th promo and Episode Highlights

அதைத் தொடர்ந்து குடும்ப கோவிலுக்கு சென்று இருக்கும் கரிகாலனை பார்ப்பதற்காக அவருடைய நண்பர் அங்கே வர அவர் தான் எடுத்த போட்டோக்கள் மட்டும் வீடியோக்களை கரிகாலனிடம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கரிகாலன் தன்னுடைய நண்பரின் அருகில் டீ குடித்துக் கொண்டிருந்த அருண் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சடைந்துகிறார்.

டேய் இது யாருடா என்று கேட்க நான் தான் என்று அந்த நண்பர் சொல்ல, இல்ல உன் பின்னாடி இருக்கிறது அருண் தானே என்று கேட்க அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கோவிலில் ஜனனி சக்தி, நந்தினி மூவரும் ஏற்கனவே அருண் மற்றும் கௌதம் இருவரையும் பார்த்துவிட்ட நிலையில் கதிர் இவர்களை பார்த்து விடக்கூடாது என்று பயந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது கதிருக்கும் உண்மை தெரிந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

Ethirneechal serial 2023 May 24th promo and Episode Highlights

அருண் என்ற பெயரை சொன்னதும் கதிர், ஜான்சி ராணி, ஜான்சி ராணியின் கணவர் மூன்று பேரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இதனால் இனி என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதே நேரத்தில் இந்த சீரியலில் ஆதிரை மற்றும் அருண் திருமணம் பலருக்கும் போர் அடிப்பதாக கமெண்ட்களில் கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்க கரிகாலன் தான் பாவம் என்று பலர் பீல் பண்ணியும் வருகிறார்கள்.

இன்னும் பல ரசிகர்கள் ஜீவானந்தம் அறிமுகம் எப்போது என்று கேள்வி எழுப்பி கொண்டு இருக்க, நாலு நாள் நடுரோடு காதலுக்காக நாலு வருஷம் இழுப்பீங்க போலயே என்று பலர் தங்களுடைய வருத்தத்தை கமண்ட்டுகளில் தெளிக்க, இந்த கல்யாண கதைக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று பலர் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+