ஜீவானந்தம் இவ்வளவு மோசமானவரா?கௌதமோடு என்ன தொடர்பு?வெளிவந்த திடுக்கிடும் உண்மை
சென்னை: ஜனனி ஜீவானந்தமிடம் பேச வேண்டும் என்று எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைகிறது.
ஜீவானந்தம் மற்றும் கௌதம் இடையே இருக்கும் உறவு வெளிவந்திருக்கிறது.
கௌதமிடம் மதுரையில் இருக்கும் மொத்த பணக்காரர்களின் லிஸ்டையும் வேண்டுமென்று ஜீவானந்தம் ஆள் கேட்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தில் எதிர்பார்த்து இருந்த தருணம் தற்போது நிகழத் தொடங்கியிருக்கிறது. அனைவரும் யார் அந்த ஜீவானந்தம் என்று எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அவரைப் பற்றிய பல முடிச்சுகள் அவிழ்த்து இருக்கிறது.
மே 30ஆம் தேதிக்கான எபிசோட்டில் ஜனனி ஜீவானந்தம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பத்தாவின் மொபைலில் இருந்து ஜீவானந்தத்திற்கு கால் செய்ய அங்கே ஒரு பெண் எடுக்கிறார். அவரிடம் ஜனனி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு ஜீவானந்தம் இருக்கிறாரா? என்று கேட்க அந்த பெண் சிறிது நேரம் கழித்து போன் பண்ணுகிறேன் என்று போனை வைத்து விடுகிறார்.
பிறகு ஜனனி தான் பட்டம்மாள் பேத்தி என்று சொன்னதை கேட்டு அந்தப் பெண் நம்பரை பிளாக் செய்து விடுகிறார். இதனால் ஜனனிக்கு சந்தேகம் வருகிறது. அதைத் தொடர்ந்து சக்தியின் நம்பரில் இருந்தும் போன் செய்த அந்த நம்பரும் பிளாக் செய்யப்படுகிறது. இதனால் ஜீவானந்தம் நல்லவரா? இல்லை என்றால் அவரால் நம்முடைய குடும்பத்திற்கு ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்று தெரிந்து கொள்கிறார்.

அதே நேரத்தில் கௌதமை போலீஸ் துரத்துகிறது. கௌதம் தப்பி மீண்டும் அருண் இடம் வந்து சேருகிறார். பிறகு இரவு ஜனனி போன் செய்த அதே பெண் கௌதமிற்கு ஃபோன் செய்து நீங்கள் போலீஸிடம் கவனமாக இருங்க ஜீவானந்தத்தையும் உங்களையும் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல நான் ஜீவானந்தத்தை பார்க்க வேண்டும் என்று கௌதம் சொல்ல நிறைய பேரு ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக ஆர்வமாக இருக்கிறாங்க என்று அந்த பெண் கூறுகிறார்.
பிறகு கௌதமிடம் அந்தப் பெண் மதுரையில் இருக்கும் மொத்த பணக்காரர்களின் லிஸ்டையும் சீக்கிரமாக ரெடி பண்ணுங்க ஜீவானந்தம் கேட்டு இருக்கிறார் என்று கூறுகிறார். இந்த நிலையில் இதுவரைக்கும் கௌதம் நல்லவர் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications