எதிர்நீச்சல்: அப்பத்தா பற்றி ஜனனி சொன்ன முக்கிய பதில்.. ஜீவானந்தம் கொடுத்த க்ளூ.. கோபத்தில் ஈஸ்வரி
அதில் வீட்டிற்கு வந்த ஜனனி மற்றும் சக்தி இருவரும் இவங்க எல்லாரும் சேர்ந்து அப்பத்தாவை கொன்னுட்டாங்க என்று சொல்லி அழுது கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து ஈஸ்வரி விசாலாட்சி இடம் ஜீவானந்தத்தை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு என்று சொல்ல அதற்கு விசாலாட்சி அசிங்கமாக பேச அதற்கு ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு ஆதரவாக பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
அதுமட்டுமல்லாமல் வெண்பாவை பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு தன்மீது குணசேகரன் கொடுத்திருக்கும் கம்பளைண்ட் காரணமாகத்தான் ஜெயிலுக்கு போவதற்கு தயார் என்றும் ஜீவானந்தம் பேசியிருந்தார். அதோடு குணசேகரன் குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு சாட்சிகள் இல்லாத வகையில் காய் நகர்த்தி இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் குணசேகரன் ராமேஸ்வரத்திற்கு அப்பத்தாவின் அஸ்தியை கரைப்பதற்காக மட்டும் போகவில்லை. இன்னும் ஏதோ பெருசா பிளான் போட்டு வைத்திருக்கிறார் என்றும் ஜீவானந்தம் பேசிக் கொண்டிருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் இனி நான் வெண்பாவை பார்த்துக் கொள்கிறேன் என்று ஈஸ்வரி தன்னோடு வெண்பாவை கூட்டிட்டு போயிருந்த நிலையில் ஜீவானந்தத்தை போலீஸ் அரெஸ்ட் செய்து ஜெயிலுக்கு கூட்டிட்டு போயிருக்கின்றனர்.
அதற்கு விசாலாட்சி நீ இன்னும் அவனுக்காக வக்காலத்து பண்ணி அலையுறா? அப்படி என்னடி அவன் உன்ன வசியம் பண்ணிட்டான் என்று கேட்க, அதற்கு கோபமான ஈஸ்வரி போதும் அத்தை நிறுத்துங்க என்று கோபமாக கத்துகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
ஏற்கனவே ஜீவானந்தம் ஜெயிலுக்கு போவதற்கு முன்பு நீங்க உங்க அப்பத்தா நினைச்ச மாதிரி எல்லாரும் இனி சுயமா சிந்தித்து முன்னுக்கு வரணும் அதற்கு நாளைக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும் அதை நீங்க சரியா பயன்படுத்திக்கணும் என்று க்ளூ கொடுத்திருந்தார் அதனால் இனி ஈஸ்வரி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications