Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பத்தா பற்றி ஜீவானந்தம் சொன்ன வார்த்தை.. அதிர்ச்சி கொடுத்த தர்ஷன்.. குணசேகரனுக்கு எதிராக சாருலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் நவம்பர் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் அப்பத்தா பற்றிய முக்கிய தகவலை ஜீவானந்தம் சொல்லி ஜனனிக்கு அறிவுரையும் கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் குணசேகரனை நேருக்கு நேராக தர்ஷன் எதிர்த்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்பத்தா உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கம் நிலையில் அப்பத்தாவை காரோடு எரித்துக் கொன்றது ஜீவானந்தம் தான் என்று குணசேகரன் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ஜீவானந்தம் ஜெயிலில் இருக்கிறார்.

Ethirneechal Serial 2023 November 23th promo full update

அதே நேரத்தில் தனக்காக வாதாடுவதற்கு யாரும் வேண்டாம் என்று தனக்கு தானே வாதாடி கொள்வேன் என்று கோர்ட்டில் ஜீவானந்தம் கூறியிருக்கிறார். இதை கேட்டு இந்த முடிவில் இருந்து மாற வேண்டும் என்று ஜீவானந்தம் சக்தி மற்றும் ஜனனி இருவரும் கெஞ்சி கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் புதியதாக தேர்தலில் நிற்பதற்காக குணசேகரன் முடிவெடுத்திருக்கும் நிலையில் அப்பத்தாவை கொலை செய்தது ஜீவானந்தமாக இருக்காது என்று எஸ் கே ஆர் குணசேகரனை மிரட்டுகிறார்.

அதை கேட்டு ஞானம் மற்றும் கரிகாலன் இருவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்தின் ரெக்கமெண்டால் காலேஜில் வேலையும் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரனை எதிர்த்து இனி தான் உறுதியாக வேலைக்கு போக வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

எதிர்நீச்சல்: மீண்டும் வந்த அப்பத்தா.. கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த ஜீவானந்தம்.. செம ட்விஸ்ட்
அதில் கோர்ட்டில் இருந்து வெளியே வரும் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக அங்கே காத்திருக்கும் சக்தி மற்றும் ஜனனி இருவரும் பின்னாடியே ஓடி போகின்றனர். அதோடு ஜனனி ஜீவானந்தத்திடம் அப்பதாவுக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு சார் என்று சொல்ல, அதற்கு ஜீவானந்தம் நீங்க அப்பத்தாவை பற்றி எதுவும் யோசிக்காதீங்க.

அவங்க கனவை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று மட்டும் யோசிங்க என்று சொல்கிறார். மறுபக்கத்தில் குணசேகரன் கோபமாக இருக்கிறார். அப்போது ஞானம் தர்ஷனிடம் எல்லாரையும் மீறி இப்படி போனா என்னடா அர்த்தம்? எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டாங்களா? என்று ஈஸ்வரியை பற்றி கேட்க, அதற்கு தர்ஷன் அவங்க மட்டும் இல்ல நாங்க எல்லாருமே துணிச்சிட்டோம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக சாருலதாவை சந்திக்கும் ஜனனி உங்கள விட பெட்டர் பர்சன் கிடைப்பாங்களான்னு தெரியல மேம் என்று ஜீவானந்ததற்காக வாதாடுவதற்கு பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி ஆக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.

அதுபோல ஜீவானந்தத்திற்காக சாரு பாலா வக்கீலாக ஆஜராகி வாதாட போவதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல நாட்களுக்கு பிறகு எஸ் கே ஆர் குடும்பம் மீண்டும் வந்திருக்கிறது. இதனால் கதையில் மாற்றம் என ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+