அப்பத்தா பற்றி ஜீவானந்தம் சொன்ன வார்த்தை.. அதிர்ச்சி கொடுத்த தர்ஷன்.. குணசேகரனுக்கு எதிராக சாருலதா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் நவம்பர் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அப்பத்தா பற்றிய முக்கிய தகவலை ஜீவானந்தம் சொல்லி ஜனனிக்கு அறிவுரையும் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டில் குணசேகரனை நேருக்கு நேராக தர்ஷன் எதிர்த்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்பத்தா உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கம் நிலையில் அப்பத்தாவை காரோடு எரித்துக் கொன்றது ஜீவானந்தம் தான் என்று குணசேகரன் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ஜீவானந்தம் ஜெயிலில் இருக்கிறார்.

அதே நேரத்தில் தனக்காக வாதாடுவதற்கு யாரும் வேண்டாம் என்று தனக்கு தானே வாதாடி கொள்வேன் என்று கோர்ட்டில் ஜீவானந்தம் கூறியிருக்கிறார். இதை கேட்டு இந்த முடிவில் இருந்து மாற வேண்டும் என்று ஜீவானந்தம் சக்தி மற்றும் ஜனனி இருவரும் கெஞ்சி கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் புதியதாக தேர்தலில் நிற்பதற்காக குணசேகரன் முடிவெடுத்திருக்கும் நிலையில் அப்பத்தாவை கொலை செய்தது ஜீவானந்தமாக இருக்காது என்று எஸ் கே ஆர் குணசேகரனை மிரட்டுகிறார்.
அதை கேட்டு ஞானம் மற்றும் கரிகாலன் இருவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்தின் ரெக்கமெண்டால் காலேஜில் வேலையும் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரனை எதிர்த்து இனி தான் உறுதியாக வேலைக்கு போக வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
எதிர்நீச்சல்: மீண்டும் வந்த அப்பத்தா.. கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த ஜீவானந்தம்.. செம ட்விஸ்ட்
அதில் கோர்ட்டில் இருந்து வெளியே வரும் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக அங்கே காத்திருக்கும் சக்தி மற்றும் ஜனனி இருவரும் பின்னாடியே ஓடி போகின்றனர். அதோடு ஜனனி ஜீவானந்தத்திடம் அப்பதாவுக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு சார் என்று சொல்ல, அதற்கு ஜீவானந்தம் நீங்க அப்பத்தாவை பற்றி எதுவும் யோசிக்காதீங்க.
அவங்க கனவை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று மட்டும் யோசிங்க என்று சொல்கிறார். மறுபக்கத்தில் குணசேகரன் கோபமாக இருக்கிறார். அப்போது ஞானம் தர்ஷனிடம் எல்லாரையும் மீறி இப்படி போனா என்னடா அர்த்தம்? எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டாங்களா? என்று ஈஸ்வரியை பற்றி கேட்க, அதற்கு தர்ஷன் அவங்க மட்டும் இல்ல நாங்க எல்லாருமே துணிச்சிட்டோம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக சாருலதாவை சந்திக்கும் ஜனனி உங்கள விட பெட்டர் பர்சன் கிடைப்பாங்களான்னு தெரியல மேம் என்று ஜீவானந்ததற்காக வாதாடுவதற்கு பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி ஆக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
அதுபோல ஜீவானந்தத்திற்காக சாரு பாலா வக்கீலாக ஆஜராகி வாதாட போவதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல நாட்களுக்கு பிறகு எஸ் கே ஆர் குடும்பம் மீண்டும் வந்திருக்கிறது. இதனால் கதையில் மாற்றம் என ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications