கௌதமால் குணசேகரனுக்கு வரும் ஆபத்து.. ஜீவானந்தத்தை சந்திக்கும் ஈஸ்வரி.. இனி வருவது இது தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 21ஆம் தேதி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தது குணசேகரன் தான் என்று உண்மை கௌதமிற்கு தெரிய வந்திருக்கிறது.

Ethirneechal Serial 2023 September 21th promo full update

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை சந்தித்து ஈஸ்வரி முக்கிய வேண்டுகோள் வைக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க முடியாத வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை நாட்களாக குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து இறந்த பிறகு அவருடைய கேரக்டரில் யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தன. இந்த நிலையில் இனி குணசேகரன் கேரக்டரில் வேறு எந்த நடிகரும் நடிக்கவில்லை என்று இப்போது கதை தெளிவுபடுத்துகிறது.

Ethirneechal Serial 2023 September 21th promo full update

அதே நேரத்தில் குணசேகரன் எப்படி இறந்து போவார் என்பது போன்று காட்சி அமைப்புகள் இனி வர இருக்கிறது. அதற்கான ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது யார் என்று தெரிந்து கொண்டு அவர்களை பழிவாங்குவேன் என்று கௌதம் சபதம் போட்டிருந்தார். இந்த நிலையில் முதலில் கௌதம் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது தோழர் மனைவியை கொலை செய்தது யாரு என்று நீ விசாரிச்சியா? ஏதாவது தெரிஞ்சதா? என்று கௌதம் அந்த கேட்க, அதற்கு அவர் அந்த விஷயத்தை செய்தது குணசேகரன் தான் என்று சொல்ல கௌதம் அதிர்ச்சி அடைகிறார். அதை தொடர்ந்து ஜீவானந்தத்தை சந்திக்கும் ஈஸ்வரி நிறைய சங்கடம் இருக்கு, வேற வழி இல்லையே என்று சொல்ல அதற்கு ஜீவானந்தம் ஆனால்.. என்று சொல்லியபடி அங்கு இருக்கும் வெண்பாவை பார்க்கிறார்.

Ethirneechal Serial 2023 September 21th promo full update

அதுபோல வீட்டில் விசாலாட்சி நீங்கள் ஆச்சு அந்த கெழவி ஆச்சு எதுவும் என்ன இழுக்காதீங்க என்று நந்தினியிடம் சொல்ல, அதற்கு நந்தினி நீங்க என்ன தப்பு பண்ணீங்க? என்று கேட்க, விசாலாட்சி அழுது கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்ததற்காக கௌதம் கையால்தான் இனி குணசேகரன் இறப்பது போன்று காட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ethirneechal Serial 2023 September 21th promo full update

ஏற்கனவே குணசேகரன் புண்ணிய ஸ்தலத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஜோதிடர் சொல்லி இருக்கும் நிலையில் அங்கு வைத்து தான் குணசேகரன் தன்னுடைய அண்ணனை பார்த்து தன்னுடைய கதையை எல்லாம் சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் தன்னுடைய அண்ணனால் காப்பாற்றப்பட முடியாமல் கௌதமால் குணசேகரன் இறந்து போவார். அதற்கு பழி தீர்ப்பதற்காகத்தான் மீண்டும் வீட்டிற்கு வந்து குடும்பத்தை ஆட்டி படைக்க குணசேகரனின் அண்ணன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்க போகுது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+