எதிர்நீச்சலில் களமிறங்கும் புது நபர்கள்.. அதிரடியாக மாற்றப்பட்ட கதை! குணசேகரனுக்கு பிரச்சனை தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 24ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் தர்ஷினியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜெயிலில் இருந்து தப்பித்த ஜீவானந்தத்தால் குணசேகரனுக்கு புது பிரச்சனை வர இருக்கிறது.

அதே நேரத்தில் தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக எதிர்நீச்சல் சீரியலில் ஸ்பெஷல் டீம் களம் இறங்கி இருக்கும் நிலையில் அவர்களும் ஜீவானந்தம் தப்பித்து போனது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டு ஜனனி குரூப் அதிர்ச்சியாக இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

Ethirneechal Serial 24th february 2024 promo full update

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் காணாமல் போன தர்ஷனியை பெண்களே தேடி கண்டுபிடிப்பது போன்று முதலில் கதை போய்க் கொண்டிருந்த நிலையில் அதற்கு பிறகு இடியாப்ப சிக்கலாக அடுத்தது பிரச்சனை வர வைத்து இப்போது இந்த சீரியலின் இயக்குனரே கதாநாயகனாக களம் இறங்கி இருக்கிறார். போலீஸ் வேனில் இருந்து நேற்று ஜீவானந்தம் தப்பித்து போயிருக்கிறார்.

ஆனால் கதைப்படி நேற்று ஜீவானந்தம் தப்பியது எதார்த்தமாக நடந்தது போல இருந்தது. ஆனால் ஜீவானந்தம் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஈஸ்வரி ரெஸ்ட் ரூம் போய்விட்டு ரொம்ப நேரத்தை கடத்தியது போன்று தான் இருந்தது. ஆனால் எதற்காக ஈஸ்வரி இப்படி செய்தார் என்று தெரியவில்லை. அதுபோல ஈஸ்வரி வண்டிக்குள் இருக்கும்போது கான்ஸ்டபிள் ஈஸ்வரியிடம் கண்ணை காட்டி போய்விட்டார் என்று கூறுவதையும் பார்க்க முடிந்தது.

இதனால் ஜீவானந்தத்தை தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரியும் கான்ஸ்டபிளும் இப்படி ஒரு பிளான் போட்டு இருக்காங்களா என்று தெரியவில்லை. ஆனால் எதற்காக இப்படி கதையை மாற்றி இருக்கிறார்கள் என்று தான் குழப்பமாக இருக்கிறது. ஏற்கனவே கோர்ட்டில் தர்ஷினியை கடத்தியது நான்தான் என்று ஈஸ்வரி சொன்னதால்தான் இப்போது அவருக்கு பெரிய பிரச்சினையாகவே ஆகி இருக்கிறது.

அதுபோல போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் ஜீவானந்தத்தை கைது செய்த போது அவர் ஒரு கதையை சொல்லியிருந்தார். அதற்கு பிறகு ஈஸ்வரி ஜனனி எல்லோரும் வந்து வேறு கதை சொல்லியதால் ஜீவானந்தம் மீதுதான் அதிகமான சந்தேகம் போலீசுக்கு வந்தது. அதை தொடர்ந்து இப்போதும் ஜீவானந்தம் போலீஸிடம் இருந்து தப்பித்து சென்றிருப்பதால் ஜீவானந்தம் தான் தர்ஷினியை கடத்தினார் என்று போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் வலுக்கிறது.

இப்படியான நிலையில் நேற்றைய எபிசோட்டில் ஜனனியின் அப்பத்தா குணசேகரன் வீட்டிற்கு வந்து இருக்கும்போது குணசேகரனிடம் கவலைப்படாதீங்க உங்க பொண்ணு திரும்ப சீக்கிரமாக வந்துடுவா என்று சொல்லும் போது குணசேகருடைய ரியாக்ஷன் வேற மாதிரி இருந்தது. தன்னுடைய மகள் வரவேண்டாம் என்பது போலவே குணசேகரன் முழித்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் ஜனனி சிஎம் செல்லுக்கு போன் பண்ணி கம்பிளைன்ட் பண்ணியதால் ஸ்பெஷல் டீம் இந்த கேசில் போட்டு இருக்கின்றனர்.

இன்றைய ப்ரோமோவில் ஸ்பெஷல் டீம் வந்து விட்டனர். ஆனால் அவர்களும் ஜீவானந்தம் தப்பித்து விட்டார் என்று கதையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஒருவேளை ஜீவானந்தம் தர்ஷினியை கண்டுபிடித்தால் கூட குணசேகரன் மீண்டும் தப்பித்து ஜீவானந்தம் மீது பழியை தூக்கி போட்டு விடுவார்களோ என்ற எண்ணம் வருகிறது.

காரணம் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு இடத்திலும் குணசேகரன் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்ப்பவர்கள் தோற்றுக் கொண்டு இருப்பது போலத்தான் கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். அதனால் இனியும் என்ன மாதிரி குழப்பம் எல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ தெரியவில்லை... அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+