எதிர்நீச்சல்: ஜனனியின் ஆசையை நிறைவேற்ற முடிவு எடுக்கும் மற்ற மருமகள்கள்.. குணசேகரனுக்கு விழும் அடி!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி அப்பத்தாவின் ஊருக்கு செல்வதற்காக முடிவெடுத்து இருக்கிறார்.
தன்னுடைய ஆசைக்காக ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மூவரும் தன்னோடு வரவேண்டும் என்று ஜனனி வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
குணசேகரனின் எதிர்ப்பையும் மீறி மற்ற மூன்று மருமகள்களும் ஜனனியோடு செல்ல இருக்கின்றனர்.

இதுதான் கடைசி பொங்கலா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் திடீர் மாற்றத்தால் குணசேகரன் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அப்பத்தா திடீரென காணாமல் சென்றிருந்த நிலையில், என்ன வேலையை செய்து வைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பத்தாவிடம் நேரடியாக உனக்கு இதுதான் கடைசி பொங்கல் என்று குணசேகரன் கூறி இருக்கிறார். ஏற்கனவே அப்பத்தா காணாமல் போனதும் அதற்கு காரணம் குணசேகரன் தான் என்று நம்பும் படியாக தான் பல செயல்கள் நடைபெற்றது. ஆனால் கடைசியில் மீண்டும் அப்பத்தா வந்து விட்டார்.

ஒரே சஸ்பென்ஷா இருக்கு
இந்த நிலையில் அடுத்ததாக குணசேகரன் என்ன பிளான் வைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் அதைப் பற்றி எதிர்பார்ப்போடும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அப்பத்தா நான் உனக்கு சளைத்தவள் அல்ல என்று சொல்லும் விதமாக அப்பத்தாவும் பல ரகசியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார். அதைப்பற்றி ஜனனியிடம் கூட வெளிப்படையாக பேசாமல் அப்பத்தா காத்திருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையில் என்ன நடக்கப்போகும் என்று எதிர்பார்ப்பு இப்போதே கூடியிருக்கிறது.

அப்பத்தாவின் புது ப்ளான்
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் பட்டம்மாள் தன்னுடைய சொந்த ஊருக்கு வீட்டில் இருக்கும் மூன்று மருமகள்களையும் கூப்பிட, அதற்கு அனைவரும் நாளைக்கு தானே வருவதாக இருந்தது எதற்காக இவர்களையும் மட்டும் முந்தின நாளே கூட்டிக்கொண்டு செல்கிறீர்கள் என்று குணசேகரனின் அம்மா கேட்க, வீட்டில் கொஞ்சம் துப்புரவு வேலை இருக்கிறது அதனால் நாங்கள் ஒரு நாளைக்கு முன்பு செல்ல வேண்டும் என்று பட்டம்மாள் கூற அதற்கு குணசேகரனும் பதில் சரி என்று ஒப்புதல் கொடுக்க பெண்கள் எல்லோரும் இன்று பட்டம்மாள் அப்பத்தாவுடன் கிளம்பி செல்கின்றனர்.

வாயை அடைக்க வச்சுட்டாங்களே
ஜனனி இன்று ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி என மூவரிடமும் நீங்கள் எனக்காக என்னோடு வரவேண்டும் என்று தன்னுடைய ஆசையை கூற, நந்தினியும் ஈஸ்வரியும் ஜனனிக்கு சத்தியம் செய்து கொடுக்கின்றனர். ரேணுகா மட்டும் யோசித்துக் கொண்டிருக்கும் போது, நந்தினி நீங்க டம்மி பீஸை கட்டிக்கிட்டு எதுக்கு அக்கா யோசிக்கிறீங்க? என கேட்க அனைவரும் குபிரென சிரித்துக் கொண்டு இருக்கின்றனர். பின்பு எல்லோரும் கிளம்பி போகும்போது நந்தினி இடம் கதிர் என்னைய கேட்காமல் எப்படி என் பிள்ளையை கூட்டிகிட்டு போற என கேட்க? தொடை இல்லாம என்ன பண்ணு என்று நந்தினி பதில் சொல்ல, எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு மனுஷங்க மாதிரி தெரியலையா? என நந்தினி மாமியார் கேட்க, பார்ப்பதற்கு மட்டும் மனுசங்க மாதிரி இருந்தா போதுமா? என்று அப்பத்தா பாட்டி பேச இதற்கு மேல பேசினா நமக்கு மரியாதை இல்லை என குணசேகரன் கூறி வாயை மூடுகிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது.












Click it and Unblock the Notifications