அப்பா சொன்னது இதுதான்.. ஜோசியர்களின் சாபத்தாலா மரணம் வந்தது? நடிகர் மாரிமுத்துவின் மகன் விளக்கம்
சென்னை: நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்த நிலையில் இன்று அவருடைய உடல் அவருடைய சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
மாரிமுத்து இறந்ததற்கு அவர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களை ஒருமையில் பேசியதும், ஜாதகத்தை நம்ப மாட்டேன் என்று சொன்னதும் தான் காரணம் என்று ஒரு தரப்பினர் வருகின்றனர்.

அது குறித்து நடிகர் மாரிமுத்துவின் மகன் தன்னுடைய தந்தையின் தகனத்திற்கு பிறகு பேட்டியில் பல தகவல்களை பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக நாம் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் நாம் இறந்ததற்கான அடையாளத்தை சிறப்பாக செய்துவிட்டு போக வேண்டும். அதுவே பின்னாடி நாம் இல்லை என்றாலும் நம்மைப் பற்றி பலரும் நினைக்கத் தோன்றும் என்று சொல்வார்கள். அந்த மாதிரிதான் நடிகர் மாரிமுத்து வாழ்ந்து விட்டு மறைந்திருக்கிறார். அவர் மனதில் பட்டதை டக்கென்று பேசிவிடும் கேரக்டராகவே இருந்து வந்தார்.
அவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பெண் அடிமைத்தனத்தில் ஊறிப் போன ஒரு நபராக நடித்திருந்தார். ஆனால் நிஜ வாழ்க்கையில் முற்போக்கு வாதியாகவும் பல மூடநம்பிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தவராகவும் தான் இருந்து வந்தார். அந்த வகையில் தான் சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது கூட "இந்தியா இந்த அளவிற்கு நாசமா போவதற்கு காரணம் ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புவர்களும் தான்" என்று கூறியிருந்தார்.
அது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது போல ஜோதிடர்கள் பற்றியும் அந்த நிகழ்ச்சியில் ஒருமையில் பேசி இருந்தார். ஆனால் நிகழ்ச்சியிலேயே பிறகு மாரிமுத்து தான் ஒரு எமோஷனலில் அப்படி பேசி விட்டேன் என்று மன்னிப்பும் கேட்டிருந்தாராம். இந்த நிலையில் நேற்று மாரிமுத்து திடீரென மாரடைப்பினால் மரணம் அடைந்திருந்த நிலையில் இது ஜோதிடர்களை தரக்குறைவாக பேசியதால் அவர்கள் விட்ட சாபத்தால் தான் இப்படி ஆகிவிட்டது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மகன், தன்னுடைய தந்தையின் உடலை எரியூட்டி விட்டு வந்த பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தனக்கு பல விஷயங்களை சொல்லி தந்து விட்டு போயிருக்கிறார். எந்த விஷயத்திலும் முற்போக்காக இருக்க வேண்டும். எந்த மூடநம்பிக்கையும் ஏற்கக் கூடாது என்று கூறி இருக்கிறார். இறுதி சடங்கில் கூட அவர் பெரிய அளவில் எல்லாம் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
அவருடைய கனவுகள், அவர் ஆசைப்பட்டது எல்லாவற்றையும் நான் இனி செய்து முடிப்பேன். அப்பா என்னிடம் பேசும்போது பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதை நாங்கள் கடைபிடிப்போம் என்று கூறி கூறியிருந்தார். அதுபோல ஜோதிடர்கள் சாபத்தால் தான் இப்படி ஆகிவிட்டது என்று சொல்வதும் ஒரு மூட நம்பிக்கைதான். அதையும் நாங்கள் நம்ப மாட்டோம் என்று மாரிமுத்துவின் மகன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications