எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் அப்பத்தா வந்தாச்சி! அப்போ கதை இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் வந்திருக்கிறது. அதாவது இந்த சீரியலில் அப்பத்தா(பட்டம்மாள்) மீண்டும் சூட்டிங்கு வந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த சீரியலில் பில்லராக அப்பத்தா இருந்து வந்தார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அப்பத்தா பிறகு தான் யார் என்பதை பற்றி வாய் திறந்து பேசிய எபிசோடு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு எதிர்நீச்சல் பெண்களுக்கு முக்கிய துணையாகவே அப்பத்தா இருந்து வந்தார். ஆனால் திடீரென்று அவர் ஹாஸ்பிடலுக்கு போகும்போது காரில் குண்டு வெடித்து இறந்து விட்டார் என்று குணசேகரன் கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

இது உண்மையா? அல்லது குணசேகரன் அப்பத்தாவை வேறு எங்கேயாவது அடைத்து வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அதுபோல ஒருவேளை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பத்தா தப்பித்து ஜீவானந்தத்தின் உதவியோடு வேறு எங்கேயாவது இருக்கலாம்... அப்படி இருந்து கொண்டு எதிர்நீச்சல் பெண்கள் சுயமாக முன்னேறுவதற்கு உதவி செய்து கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
ஆனால் இது பற்றிய காட்சிகள் இதுவரைக்கும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்த சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை கனிகா அப்பத்தா உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அப்போ மீண்டும் அப்பத்தா எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் இப்போது குணசேகரனுக்கு எதிராக வீட்டு பெண்கள் மட்டுமல்லாமல் அவருடைய தம்பிகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் இனி அப்பத்தாவும் மீண்டும் சீரியலுக்கு வந்து விட்டால் குணசேகரன் தோற்றுப் போவது உறுதியாகிவிடும். ஏற்கனவே இந்த சீரியலில் பல பிரச்சனைகள் தொடங்கி அதற்கு முடிவுக்கு காணப்படாமல் இருக்கும் நிலையில் முதல் முறையாக அப்பத்தா இறந்து போய்விட்டார் என்று நடித்துக் கொண்டிருக்கும் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலே இனி பெண்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கிறது.
கடந்த வார எபிசோடில் குணசேகரனின் சாமியாடி மாமா அருள் வந்து பேசுகையில் குணசேகரன் நீ இத்தனை நாட்களாக ஜெயித்துக்கொண்டே இருந்த... ஆனால் நீ தோற்றுப் போக வேண்டிய நாள் வந்துவிட்டது. இனி உனக்கு தோல்விதான் வரப்போகிறது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இப்போது பட்டம்மாள் மீண்டும் சூட்டிங் வந்திருப்பதால் சீரியல் பற்றி எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே நேரத்தில் இப்போது கல்யாணம் கல்யாணம் என்ற பேச்சும் கடத்தல் காட்சிகளும் தான் அதிகமாக இருக்கிறது. மீண்டும் அப்பத்தா சீரியலுக்கு வந்தால் பழையபடி 60% சொத்து யாருக்கு என்று பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதும் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications