எதிர்நீச்சல்: வீட்டிற்கு மீண்டும் வந்த ஆதிரை.. குணசேகரனுக்கு கிடைத்த அவமானம்.. பரபரப்பின் உச்சம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை மறு வீட்டிற்கு கரிகாலனோடு குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் வாசலில் வைத்தே குணசேகரன் ஆதிரையை காக்க வைக்கிறார்.
பிறகு ஆதிரைக்கு எல்லாம் முறைப்படி செய்ய வேண்டும் என்று குணசேகரன் கூறியதை கேட்டு நந்தினியும் ரேணுகவும் கடுப்பாகி கேள்வி கேட்கின்றனர்.
நந்தினி ரேணுகாவை குணசேகரன் அவமானப்படுத்துவதை பார்த்து ரேணுகாவின் மகள் குணசேகரனை கேள்வி கேட்டு அவமானப்படுத்துகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடந்து இருக்கும் நிலையில் இன்று வெளியான பிரமோவில் குணசேகரன் வீட்டிற்கு ஆதிரை மறு வீட்டிற்கு வருகிறார்.
ஆதிரையை நந்தினி, ரேணுகா, ஜனனி மூவரும் சென்று சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு வர வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் அருணுக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தை பற்றி நேற்றைய எபிசோடில் நந்தினி கூறியதை கேட்டு ஆதிரை அதிர்ச்சியாக இருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன முடிவெடுக்க போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஜனனி மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும் குணசேகரனை பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் வீட்டிற்கு வந்த ஆதுரையை வாசலில் நிற்க வைத்த குணசேகரன் வீட்டு மருமகளை ஆரத்தி எடுக்க சொல்லி சொன்னதும் நந்தினி கோபப்படுகிறார். ஆமா கல்யாணம் மட்டும் முறைப்படி நடந்துட்டு இதுல ஆரத்தி தான் குறை என்று சொல்ல குணசேகரன் கோபம் ஆகிறார்.

அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் மருமகளை குணசேகரன் திட்டுவது பார்த்து ரேணுகாவின் மகள் கேள்வி கேட்கிறார். அதற்கு குணசேகரன் உனக்கு இதெல்லாம் யாரு சொல்லி தந்தா என்று கேட்க? அதற்கு அந்த குழந்தை இதை யாரும் எனக்கு சொல்லி தரல. நீங்க பேசுறதை பார்த்து இப்படி யாரிடமும் பண்ண கூடாதுன்னு நானா தெரிஞ்சுக்கிட்டதுதான் என்று முகத்தடி கொடுக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பெரும் பரபரப்பும் சண்டையும் இருப்பது கன்ஃபார்ம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications