எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு கரிகாலன் வச்ச ஆப்பு.. பாயிண்டை பிடிச்ச நந்தினி.. இவ்ளோ மாறிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மே 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று வெளியான ப்ரோமோவில் ஞானத்தை வைத்து குணசேகரனை அவமானப்படுத்தி இருக்கிறார். மறுபக்கத்தில் ஞானத்தை ஏமாற்றிக்கொண்டு ஓடிப்போன கரிகாலன் வீட்டிற்கு மீண்டும் வருகிறார் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவின் அம்மா கொடுத்த பணத்தை வைத்து ஞானம் கருவாட்டு கடை வைத்து பிசினஸ் பண்ண போறேன் என்று மொத்த பணத்தையும் கரிகாலனை நம்பி கொடுக்க கரிகாலன் கடைசியில் கடத்தல் பொருளை கொண்டு வந்து வைத்து ஞானம் மற்றும் மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி விட்டார்.

Ethirneechal Serial may 9th Promo and fans reaction 13-05-24

இதனால் ரேணுகா ஞானத்தை அடித்து இருக்கிறார். ஞானம் நான் அண்ணன் சொல்ற மாதிரி ஒன்னுக்கும் உருப்படாதவனாக தான் இருக்கிறேன். எனக்கு எதையும் செய்ய முடியாது என்று புலம்பி கொண்டு இருக்க, குணசேகரன் என்னை எதிர்த்து உங்க யாராலும் ஜெயிக்கவே முடியாது. நீங்க தோற்றுக் கொண்டுதான் இருப்பீங்க என்று மீண்டும் அசம்பாவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் நந்தினியின் அப்பா தாராவுக்கு காது குத்த வேண்டும் என்று சொல்லி குணசேகரனிடம் ஏற்கனவே அனுமதி கேட்டிருந்தார். அதற்கு குணசேகரன் அவமானப்படுத்தி திட்டி இருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் தாராவிற்க்கு காதுகுத்து ஃபங்ஷன் வைப்பதற்காக இன்விடேஷன் ரெடி ஆகி வந்திருக்கிறது.

Ethirneechal Serial may 9th Promo and fans reaction 13-05-24

அதை குணசேகரனிடம் கொடுத்து பெரியவருக்கு அடுத்ததாக நீங்கதானே மாமா இருக்கீங்க. நீங்க தான் இதை படிச்சு பாக்கணும். அவரு இதை படிக்கலைனா போகட்டும் ஆனால் நீங்க இதை படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சியாகி கோபத்தில் நிற்கிறார். அடுத்த கட்டத்தில் குணசேகரன் என்னால் இந்த ஃபங்ஷனுக்கு எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

Ethirneechal Serial may 9th Promo and fans reaction 13-05-24

நந்தினி என்னை நம்பி என்கிட்ட லெட்டர் கொடுத்துச்சு. ஆனால் என்கிட்ட இப்போ எந்த பணமும் இல்லையே என்று கதறி அழுது கொண்டு இருக்க அதை கேட்டு கிச்சனில் இருந்தபடியே ரேணுகாவும் அழுது கொண்டிருக்கிறார். அதற்கு சக்தி உன்கிட்ட பணம் இல்லன்னா என்ன அண்ணே நாம மூணு பேரும் ஒற்றுமையாய் இருக்கோம். அது போதும் என்று ஞானத்திற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.

நீயா நானாவா இல்லை சொல்வதெல்லாம் உண்மையின் சாயலா? ஏன் இப்படி? கோபிநாத்துக்கு குவியும் கேள்வி
அதைத் தொடர்ந்து ஞானத்திடம் பணத்தை ஏமாற்றிக் கொண்டு ஓடிப்போன கரிகாலன் மீண்டும் வீட்டிற்குள் வருகிறார். இதனால் கரிகாலனிடம் இருந்து ஞானம் பணத்தை வாங்குவாரா? அல்லது கரிகாலன் இப்படி செய்ததற்கு காரணம் குணசேகரன் தான் என்று கரிகாலன் எதுவும் குண்டை தூக்கி போட போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+