எதிர்நீச்சல்: உயிர் பிழைத்த சக்தி சொன்ன விஷயம்! அதிர்ச்சியில் ஜனனி! குணசேகரன் கதை இனி அவ்வளவுதானா?
சென்னை : 'எதிர்நீச்சல்' சீரியல்ல, இப்போ போயிட்டு இருக்குற ஃப்ளாஷ் பேக் இருக்கு பாருங்க... சும்மா அடிச்சுத் தூக்குது! குணசேகரன் இப்ப வில்லத்தனம் பண்ணுறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சின்ன வயசுலயே அவர் செஞ்சக் கொடூரமான வேலை இப்போ குடும்பத்தைக் கதிகலங்க வச்சுட்டு இருக்கு!

கதறி அழுத நந்தினி
தனுஷ்கோடிக்கு பல எதிர்ப்புகளைத் தாண்டி போன சக்தி, அங்க ஒரு சாமியாரை சந்திச்சு 'தேவகி' பத்தின ரகசியத்தை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டார்! ஆதி முத்து நேபாளத்துல இருந்து வந்த தேவகியை சொத்துக்கு ஆசைப்பட்டு ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்கார். அவருக்கு ஏற்கனவேத் திருமணம் ஆனது தெரியாம தேவகி ஒரு பையனையும் பெத்து இருக்காங்க.
குணசேகரனின் மிரட்டல்
இந்த விஷயம் தெரிஞ்சதும், குணசேகரன், "ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்! இந்த ஊரை விட்டுக் கிளம்புங்க!"ன்னு மிரட்டி இருக்கான். ஆனா, தேவகி அங்கேயேத் தங்கி இருக்கவும், அவளைக் கொலை செய்ய ஆட்களை அனுப்பி இருக்கான். உயிருக்கு பயந்து தேவகி தன் பையனோட ஓடி, சாமியார் கிட்டப் போய்ச் சேர்ந்திருக்கா. ஆதி முத்து உடல்நிலை சரியில்லாம இறந்த பிறகு, குணசேகரன் மொத்தக் குடும்பப் பொறுப்பையும் ஏத்துக்கிட்டு, தேவகி கதையை முடிக்கத் திட்டம் போடுறான். ஆதி முத்து கூட வாழ்ந்த வீட்டை பார்க்க வந்த தேவகியைப் பிடிக்க, "என் பையனை மட்டும் வாரிசா ஏத்துக்கோங்க"ன்னு கேட்க, அவளைக் குத்திக் கொலை பண்ணிருக்கான்!
நந்தினியின் கண்ணீர்
இந்த கொடுமையை எல்லாம் கேள்விப்பட்ட நந்தினி, "இப்படிச் சம்பாதிச்ச ஒருத்தனோட பணத்துல தான் என் பிள்ளைங்க வளர்ந்தாங்களா? நினைச்சாவே உடம்பெல்லாம் கூசுது!"ன்னு அழுதுப் புலம்புறா. ஜனனி என்ன சொல்றதுன்னே தெரியாம வாயடைச்சுப் போயிட்டா.
ராணா மிஸ்ஸிங்
குணசேகரன் அடியாள் கிட்ட இருந்து எப்படியோ தப்பிச்சுப் போன தேவகியின் பையன் ராணா எங்க இருக்கான்னு சக்தி கேட்க, சாமியார் ஒரு ஷாக் கொடுத்திருக்கார்: "நான் ராணாவைப் படிக்க ஹாஸ்டல்ல சேர்த்தேன். ஆனா, அவன் என்ன நினைச்சானோ தெரியலை, அங்கிருந்து ஓடிப் போயிட்டான்"ன்னு சாமியார் சொல்ல, சக்தி ரொம்பவே அதிர்ச்சி அடைஞ்சுட்டு, ஊருக்குக் கிளம்புறான்.
ஆதி குணசேகரன் பிளான்
இந்த நேரத்துல, ஆதி குணசேகரனுக்கு ராமேஸ்வரத்துல இருந்து ஒரு போன் வந்திருக்கு!. அடியாள் போன் பண்ணி, "ஒரு சின்னப் பிரச்சனை ஆகிடுச்சு! சக்தி நம்ம ஆளுங்கள அடிச்சு விரட்டிட்டுச் சாமியார் கூடத் தப்பிச்சுப் போயிட்டான்!"ன்னு சொல்லி இருக்கான். இதைக் கேட்டு டென்ஷன் ஆன குணசேகரன், "உன்னை மாதிரி அரைவேக்காட்டுப் பயலுகள நம்புனா இப்படித்தான் கோட்டை விட்டுட்டு நிக்கணும்! நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவனைப் புடிச்சு மடக்கி, அவன் கையில என்னென்ன இருக்கோ, அத்தனையும் புடுங்கிட்டு, அவனை அடிச்சு விரட்டி விடு! இதுல ஏதாவதுத் தப்பு நடந்துச்சோ, நானே இராமேஸ்வரம் வந்து, உன்னை வெட்டி கடல்லப் போட்டுருவேன்!"ன்னு மிரட்டி ஆர்டர் போட்டு இருக்கான்!
அன்புக்கரசியின் வெறித்தனம்
வீட்டுக்குள்ளயும் டென்ஷன் குறையல! அன்புக்கரசி திரும்ப வீட்டுக்கு வந்ததும், தர்ஷினி வாசல்லயே மறிச்சுப் பேசுறா.
"உனக்கு கடைசியா வார்னிங் கொடுக்குறேன்! மரியாதையா நீயே இங்க இருந்து ஓடிரு, இல்லைன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்!"ன்னு மிரட்ட, அதுக்கு அன்புக்கரசி, "பிரச்சனையை நீ இனிமேதான் பண்ணுவேன்னு சொல்ற; ஆனா, நான் பொறந்ததுல இருந்தே பிரச்சனையோடதான் வாழ்ந்துட்டு இருக்கேன்! அதனால, இதுக்காகலாம் பயந்து என்னால ஓட முடியாது! உன்னால முடிஞ்சத நீ பாத்துக்கோ!"ன்னுச் சவால் விட்டுட்டு உள்ள போறா.
ஜனனிக்கு சவால்
ஜனனி பார்த்து முறைக்கும்போது, அன்புக்கரசி, "இப்படியே முறைச்சுட்டு நிக்காம, அடுத்து ஏதாச்சும் பண்ணுங்க, ஒர்க் அவுட் ஆகுதான்னுப் பார்ப்போம்!"ன்னு சேலஞ் பண்ணிட்டு உள்ள போறா!இதற்கு நடுவுல, போன்ல பேசின சக்தி, "இங்க பெரிய விஷயம் நடந்திருக்கு, நேர்ல வந்து எல்லாம் சொல்றேன்"ன்னு ஜனனி கிட்ட சொல்ல, அவளும் அழுதுக்கிட்டே "எமர்ஜென்சின்னா எனக்குக் கால் பண்ணு!"ன்னு கவலைப்படுறா!
இப்போ எல்லாப பிரச்சனையும் ஊருக்கு வரப்போகுது! குணசேகரனுக்கு பெரிய ஷாக் காத்துட்டு இருக்குது. ஆனாலும் இனி என்ன நடக்க போகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications