Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகமா? அதுவும் சன் டிவியில் இல்லையா? இனி இவருக்கு தான் முக்கியமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஜூன் 8-ம் தேதி முடிவுக்கு வந்திருந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது என்ற தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இரண்டாவது பாகம் சன் டிவியில் ஒளிபரப்பாகவில்லை என்றும் கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியலுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதத்தில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் தொடங்கப்படும் போது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. கோலங்கள் சீரியலுக்குப் பிறகு திருச்செல்வம் ஒரு சில சீரியல்களை இயக்கியிருந்தார்.

Television Tamil Cinema Sun TV Ethirneechal Serial Director Thiruchelvam

ஆனால் அது கோலங்கள் சீரியல் அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் எதிர்நீச்சல் சீரியல் டைட்டில் பாடல் முதல் நாள் எபிசோடு வரை எல்லாமே ரசிகர்களை கவரும் விதத்தில் எதார்த்தமாக அமைந்தது ரசிகர்களை அதிகமாக ஈர்த்துவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் ஆரம்பத்திலேயே மற்ற சேனல் தரப்பினரை பொறாமைப்பட வைக்கும் அளவிற்கு இந்த சீரியல் பட்டிதொட்டி எல்லாம் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் யார் கண்ணுபட்டதோ என்று தெரியவில்லை இந்த சீரியலில் வில்லனாக இருந்தாலும் கதாநாயகன் ரேஞ்சில் குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய திடீர் இறப்பு சின்னத்திரை ரசிகர்களையும் சீரியல் தரப்பினரையும் அதிக அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அதற்குப் பிறகு சீரியல் தரப்பினர் சீரியலில் பல்வேறு மாற்றங்களை செய்து பார்த்தனர்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு படிப்படியாக குறைய தொடங்கி விட்டது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த சீரியல் முடிவடைய போகும் செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. பிறகு ஜூன் 8-ம் தேதியோடு இந்த சீரியல் முடிவடைந்ததும் சீரியலில் நடித்த நடிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய வருத்தங்களை சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தொடங்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்கப் போவதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதோடு இயக்குனர் திருச்செல்வத்திடம் மற்றொரு சேனலில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென அந்த சீரியல் முடிவுக்கு வரும்படி சேனல் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் சீரியல் முடிவு அடையப்பட்டது என்றும் அதனால் இரண்டாவது பாகம் வேற சேனலில் ஒளிபரப்பாகலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இரண்டாவது பாகத்தில் சக்தி மற்றும் ஜனனிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை இருக்கும் என்றும் அதில் கூறியிருக்கிறது. ஆனால் இந்த செய்திகள் உண்மையா? இல்லையா? என்று அதிகாரப்பூர்வமாக திருச்செல்வம் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை.

எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்ததும் திருச்செல்வம் தன்னுடைய மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவது பாகம் தொடங்கப் போகிறாரா? இல்லையா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+