குணசேகரனுக்கு நான் வில்லன் தான்.. ஆனால் மாரிமுத்து இறந்த அன்று மதியம் நடந்தது தெரியுமா?.. SKR எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.
நல்லா இருந்த மனிதன் திடீரென்று இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்களும், அவரோடு நடித்த நடிகர்களும் பல பிரபலங்களும் நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல நடிகர் மாரிமுத்துவோடு நெருங்கி பழகிய பலர் அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுக்கு வில்லனாக இருக்கும் எஸ் கே ஆர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ட்ரெண்டிங் ஸ்டார் ஆக பிரபலமாகி கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மரணம் அடைந்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கிறது. ஆனாலும் இதையும் கடந்து தான் போக வேண்டும் என்று பலர் மனதை தைரியப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் மாரிமுத்து தங்களிடம் பேசியது மற்றும் அவருடைய குணநலன்கள் பற்றி அவருடைய நண்பர்களும் பல நடிகர்களும் தொடர்ச்சியாக பல தகவல்களை பேசி வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் எஸ் கே ஆர் தற்போது மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில், மாரிமுத்து சார் போன்று நடிப்பில் வெறித்தனமாக இருக்கும் நபரை நான் பார்த்ததில்லை. முதல் முறையாக நான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறேன். இதற்கு முன்பு எனக்கு நடிப்பு அனுபவம் கிடையாது. ஆனால் நான் மாரிமுத்து சாரை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன் அதனால் இந்த சீரியலில் நடிக்கும் போது பல தகவல்களை நான் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். அவரும் எந்த விஷயமாக இருந்தாலும் கொஞ்சம் கூட மனம் கோணாமல் எல்லாவற்றையும் சொல்லித் தருவார்.
சீரியலின் கதைப்படி நான்தான் அவருக்கு வில்லன். ஆனால் நான் செய்யும் சின்ன சின்ன தவறுகளையயும், கவனக் குறைவுகளை கூட சுட்டிக்காட்டி இதை இப்படி செய்ங்க சார். இன்னும் சிறப்பாக இருக்கும் உங்கள் கண் அசைவு பார்வை அழகாக இருக்கிறது. அதனால் அதை இப்படி பாருங்கள், கண்ணாடியை உங்கள் கண்ணில் சரியாக மாட்டுங்கள். அப்போதான் நீங்கள் மிரட்டலாக தெரிவிங்க என்று பல விஷயங்களை சொல்லிக் கொண்டே இருப்பார்.
அதுபோல நான் டப்பிங் பேசுவதற்கு முதலில் பயந்தேன். வேண்டாம் வேற யாரையாவது வைத்து பேசிக்கொள்ளலாம் என்று இயக்குனரிடம் சொன்ன போது, இல்லை நீங்களே பேசுங்கள் உங்களுடைய குரல் சரியாக இருக்கிறது என்று எனக்கு தைரியம் கொடுத்தது மாரிமுத்து சார் தான். நான் முதல் நாள் டப்பிங் பேசிவிட்டு முடித்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு தான் மாரிமுத்து சார் வந்தார் அவர் வந்த பிறகு அவர் பேசுவதை கொஞ்சம் பார்க்கலாம் என்று இருந்தேன். அப்புறம் தான் எனக்கு தெரிந்தது. டப்பிங் பேசும்போது கூட அவர் முழு சாட் எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது.
டைரக்டர் கூட இது போதும் என்று சொன்னால் வேண்டாம் இன்னும் கொஞ்சம் மாற்றி பேசுகிறேன் என்று இவராகவே பேசுவார். அதைப் பார்த்து நான் வியந்து போயிருந்தேன். மாரிமுத்து சார் இறந்து போய்விட்டார் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. பலர் எனக்கு போன் செய்து கேட்டார்கள் என்னுடைய மனைவி அன்னைக்கு மதியம் சாப்பிடவே இல்லை. அன்று முழுக்க என்னுடைய மனைவியும் அழுது கொண்டே இருந்தார். அந்த அளவிற்கு மாரிமுத்து சாரருடைய நடிப்பு என்னுடைய மனைவிக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் பிடிக்கும்.
இனி நான் யாரோடு சண்டை போட போகிறேன்? என்று எனக்கு தெரியவில்லை. சீரியலில் நாங்கள் கதைப்படி சண்டை போட்டுக் கொண்டாலும் அவர் பேசும் வசனத்தை பார்த்து நான் அடுத்த நிமிடமே சிரித்துக் கொண்டிருப்பேன். அவ்வளவு அழகாக அவர் பேசுவார். ஒவ்வொரு இடத்திலும் அவர் செய்யும் செயலை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்று நடிகர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை எமோஷனல் கலந்து எதிர்நீச்சல் எஸ்கேஆர் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications