அதான் சீரியலை முடிக்க போறோமே இப்போ சந்தோஷமா? ஆதங்கப்பட்ட எதிர்நீச்சல் நடிகை.. ரசிகர் கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் வரும் ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ரசிகருக்கு இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சத்யபிரியா கொடுத்த பதில் தான் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் சின்ன திரையில் புரட்சியை ஏற்படுத்தியது. சீரியல் இதுவரைக்கும் பார்க்காத ஆண்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கத் தொடங்கினர். இதனாலேயே இணையத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான பாராட்டுகளும் குவிந்து வந்தது.

Ethirneechal Serial Television Entertainment Sun TV

ஆனால் இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு சீரியல் கதை வேறு விதமாக பயணிக்க தொடங்கியது. புதியது புதியதாக பல கேரக்டர்கள் சீரியலில் அறிமுகப்படுத்தப்பட்டனர். அதனால் சீரியலில் தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்பது ரசிகர்களின் அதிர்ச்சியாக இருந்தது. அதோடு சீரியலின் கதையும் பல மாதங்களாகவே இழுத்து கொண்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியானது. அதோடு அதை உறுதி செய்யும் வகையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக இந்த சீரியலில் நடிக்கும் போது எடுத்த புகைப்படங்களையும் தங்களுடைய மெமரிகளாக பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை சத்யபிரியா அதாவது எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் சீரியல் முடிவடைய போகிறதா என்று கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று சொல்லி இருந்தார். அதுபோல லேட்டஸ்ட் ஆக ஒரு பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது. அது எதிர்நீச்சல் சீரியல் முடிவடைய போகிறது என்ற போஸ்ட் தான்.

அந்த பதிவுக்கு கீழே athivik2311 என்ற ஐடியில் இருந்து, "பட்டம்மாள், மாரிமுத்து கதாபாத்திரம் இல்லாத சீரியல் நிஜமாவே நல்லாவே இல்ல. செம மொக்க சீரியல்.. ஆரம்பத்துல இருந்த விறுவிறுப்பு அந்த மாரிமுத்து சிஸ்டர் மேரேஜ்க்கு அப்புறம் சுத்தமா இல்ல" என்று ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதற்கு சத்யபிரியா, "அதான் முடிக்கிறோமே சந்தோஷமா?" என்று ஆதங்கத்தோடு பதில் கொடுத்திருக்கிறார்.

Ethirneechal Serial Television Entertainment Sun TV

இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் முடிவு குறித்து இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் பீல் பண்ணி வருவதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் எதற்காக இந்த சீரியல் இவ்வளவு சீக்கிரமாக முடிவுக்கு வரப்போகிறது என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியல் டி ஆர் பி யில் ஐந்தாவது இடத்திற்கு போனது காரணமா? என்று கேட்கப்பட்டாலும் இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் டிஆர்பியை பெரிதாக கருத்தில் கொள்வது கிடையாது.

ஆனால் வேற ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த சீரியல் முடிவடைந்ததும் இதைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் வரப்போகிறதா இல்லையா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும் நிலையில் அது குறித்து பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த சீரியல் முடிவு குறித்து உங்களுடைய கருத்து என்ன? அதே நேரத்தில் நடிகை சத்யபிரியா கோபப்பட்டது சரிதானா? என்ற கருத்தை சொல்லிட்டு போங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+