"மறைந்த அம்மாவே மீண்டும் வரப்போகிறார்”அப்பாவாகப் போகும் அஜய் கிருஷ்ணா..குவியும் இரண்டு வாழ்த்துக்கள்
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா விரைவில் அப்பாவாக போகும் மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
சமீபத்தில் தான் அஜய் கிருஷ்ணாவிற்கு ஜெசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அஜய் கிருஷ்ணாவின் அம்மா ஏற்கனவே மறைந்து விட்டார் அவர் மீண்டும் வந்து பிறக்கப் போகிறார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஏழ்மையான குடும்பம்
விஜய் டிவி பிரபலமான அஜய் கிருஷ்ணா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயம் ஆனவர்தான். இவர் அந்த சீசனில் அவ்வளவு பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றாலும் இவர் ஜூனியர்களுக்காக சப்போர்ட் பண்ணி கொண்டிருந்த சீசனில் அதிக அளவில் பிரபலமாகி விட்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜய் கிருஷ்ணா மூன்று அக்காக்களுக்கு ஒரே தம்பியாக இருந்திருக்கிறார். இவருடைய அம்மாவும் இவர் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து விட்டாராம். அக்காவின் அரவணைப்பில் தான் இவர் வளர்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென இவருடைய அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால் அவரும் வீட்டிலே முடங்கி விட்டார்களாம்.

வாழ்த்து முதல் திருமண வரை
இவருடைய அக்காக்கள் தான் இவரை படிக்க வைத்து, இவருக்குள் இருக்கும் பாடல் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக பல முயற்சிகளை எடுத்து இருக்கின்றனர் .குடும்பத்தின் மீது எப்போதுமே பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் அஜய் கிருஷ்ணா தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் குடும்பத்தை பற்றி கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். இந்த நிலையில் தான் இவருடைய வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை கொடுக்க வந்த ஜெஸ்ஸியை இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பார்த்திருக்கிறாராம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தன்னுடைய பாடல் ஒன்றை பதிவிட அதற்கு வாழ்த்து கூறிய ஜெஸி ரிப்ளை செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி பின்பு காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர்.

விரைவில் அம்மா அப்பா
அஜய் கிருஷ்ணாவின் அக்காக்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்து விட்டதாம். அதற்குப் பிறகு அஜய் கிருஷ்ணாவிற்கு அம்மா ஸ்தானத்தில் இருந்து ஜெஸி இருந்து வருவதாகவும் அவர் மீது இருக்கும் காதலை பலமுறை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறார். இவர்களுடைய காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகப் போகும் மகிழ்ச்சியான விஷயத்தை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கின்றனர்.

இரண்டு வாழ்த்து
அஜய் கிருஷ்ணா தன்னுடைய அம்மாவை நினைத்து பல இடங்களில் கண் கலங்கி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனாலே இந்த மகிழ்ச்சியான செய்தியை இவர்கள் அறிவித்ததும் ரசிகர்கள் மீண்டும் உங்கள் அம்மா உங்களிடம் வரப் போகிறார் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்று அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாளாம். அதனால் அவருடைய பிறந்த நாளில் அவருக்கு டபுள் வாழ்த்து கிடைத்து வருகிறது.
-
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications