தள்ளிப் போகும் முதலிரவுகள்.. தல பட ஸ்டைலுக்கு மாறும் சீரியல்கள்!
சென்னை: செய்தி சேனல்கள் தவிர எல்லா டிவி சேனல்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பறாங்க .பல சீரியல்களில் கல்யாணம் முடிச்சும் தம்பதிங்களுக்கு முதலிரவு நடக்கலீங்க.
அஜித் ரெட்டை வேஷத்துல நடிச்ச வாலி படத்துல ஆரம்பிச்சுது முதலிரவு தள்ளி தள்ளி போறது. இப்போ சீரியல்களில் இதையே டிரண்டாக்கிட்டு வர்றாங்க.
சன் டிவியின் நாயகி, சந்திரலேகா சீரியல்களில் கண்மணி,செழியன், அஞ்சலிக்கும் அவ புருஷனுக்கும் முதலிரவு நடக்கலை. மின்னலே சீரியலில் இன்னிக்குதாங்க ஷாலினிக்கு, ராஜேஷுக்கு கல்யாணம் பண்ணி வச்சு முதலிரவு ரூமுக்குள்ள அனுப்பி வைக்கறாங்க.
கிழக்கு வாசல் கிராமத்துக்கு ரெண்டு வாசல்தானாமே... கலவரம்னா என்ன செய்ய?
அதுக்குள்ளே ஷாலினி,ராஜேஷின் எதிரி டாக்டர் வசீகரன், முதலிரவை நிறுத்த வேணும்னே முதலிரவு நடந்தா ராஜேஷ் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி நடக்க இருக்கும் முதலிரவை தடுக்கறான்.
விஜய் டிவியில நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரெட்டை பிள்ளைங்க அரவிந்த், மாயன் ரெண்டு பேருக்குமே இன்னும் முதலிரவு நடக்கலை. அரண்மணி கிளி சீரியலில் ஜானுக்கும், அர்ஜூனுக்கும் பேருக்கு கல்யாணம் மட்டும் நடந்துச்சு.அதுக்குப் பிறகு நடக்கறது ம்ஹூம் இன்னும் இல்லை.
சின்ன தம்பி சீரியலில் ரொம்ப மாசங்களுக்கு பிறகு நந்தினிக்கும் , சின்னத்தம்பிக்கும் ஒரு வழியா முதலிரவு நடந்துருச்சு. ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டதால,இன்னும் அவனுக்கும் முதலிரவு நடக்கலை.
கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனிக்கும், சந்தோஷுக்கும் இன்னும் முதலிரவு நடக்கலை.
கல்யாணம் ஆனதும் அதது காலாகாலத்துல தானா நடக்க வேண்டியது. இதை வச்சு வாலி பட காலத்துலேர்ந்து கதை எழுதிக்கிட்டு இருக்காங்க பாருங்க.