பேச்சு வார்த்தைக்கு பின்னர்தான் சின்னத்திரை ஷூட்டிங்!
சென்னை: அரசு அனுமதி அளித்து இருந்தாலும், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகே ஷூட்டிங் தொடங்குவோம் என்று, நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, சுஜாதா விஜயகுமார் உள்ளிட்டவர்கள் இன்று தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய செல்வமணி, சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் போதாது என்று கூறினார்.
அதிகம் பேரை அனுமதித்தால் மட்டுமே, ஷூட்டிங்கை நடத்த முடியும். இதை தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளோம் என்று சொன்னார். கடந்த வாரம் தமிழக அரசு சின்னத்திரை சீரியல்கள் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியது.

தமிழக அரசின் கெடுபிடிகள்
சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு தளம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் கேமிரா உள்ளிட்டவைகளையும் கிருமிநாசினியால் நன்கு சுத்தப்படுத்தி இருக்க வேண்டும். வெளியூரில் மட்டுமே திறந்த வெளியில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று விதிமுறைகளை விதித்தது. அதோடு, கேமிராவுக்கு பின் இருப்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். காட்சி இல்லாதபோது நடிகர்களும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்...என்றும் தெரிவித்து இருந்தது.

20 நபர்கள் மட்டுமே
படப்பிடிப்பு 20 பேர்களை மட்டுமே வைத்து நடத்தப்பட்ட வேண்டும் என்றும் அதில் முக்கிய விதிமுறையாக இருந்தது. இதற்குத்தான் இன்று தமிழக அரசை சந்தித்து குறைந்த் பட்சம் 50 நபர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பார்க்கப்போனால் அதிக செலவில் எடுக்கப்படும் சீரியல்களுக்கு 100 பேராவது தேவைப்படுவர் என்றும் கூறினார்.

கட்டுப்பாடுகளுடன் அனுமதி
தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் தேவையான ஆட்களை வைத்து சின்னத்திரை சீரியல்களை ஷூட்டிங் செய்ய அனுமதி தர வேண்டும். ஷூட்டிங் நடத்துவதன் மூலம் கொரோனா பரவல் இருக்காது என்று ஒவ்வொருவரும் உறுதி அளிக்கிறோம் என்றும் கூறி உள்ளனர்.

முடிவு குஷ்பூ
அரசு அனுமதி அழைத்தவுடன் யார் வேண்டுமானாலும் முதலில் ஷூட்டிங் தொடங்கிவிடலாம் என்பது இல்லை. சின்னத்திரை சீரியல்கள் தயாரிப்பாளர்கள் பேசி முடிவு எடுத்த பின்னர்தான், ஒட்டு மொத்தமாக சின்னத்திரை சீரியல்கள் ஷூட்டிங் துவங்கும் என்றும் கூறி இருக்கார் நடிகை குஷ்பூ.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications