தண்டனை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறேன்..குழந்தையின் நிலைமை! கண்ணீர் விட்டு பேசிய அர்னாவ்
சென்னை: சின்னத்திரை நடிகரான அர்னாவ் தன்னுடைய குழந்தையை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் அர்னாவ் மற்றும் அவருடைய மனைவி நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய குழந்தையை இப்ப வரைக்கும் நேரில் அர்னாவ் சென்று பார்க்கவில்லையாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னாவ் மற்றும் சன் டிவி செவ்வந்தி சீரியல் கதாநாயகி திவ்யா ஸ்ரீதர் திருமணம் காதல் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் வெளியே தெரிந்த சில நாட்களிலே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு காரணமாக போலீஸ் கம்ப்ளைன்ட் வரைக்கும் போய் சமூக வலைத்தளத்தில் பலரும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாக இருந்து வருகிறது.
காத்திருப்பு கிடைத்தது.. குழந்தை பிறந்ததை பற்றி உருக்கமாக பதிவிட்ட திவ்யா.. அர்னவின் திடீர் பதிவு
திவ்யா ஸ்ரீதர் அவருடைய கணவர் அர்னாவ் கர்ப்பமாக இருக்கும்போது தன்னைக் கொடுமைப்படுத்தியதாக போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். அதனால் அர்னாவ் ஜெயிலிலிருந்து பிறகு ஜாமினில் வந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இப்ப வரைக்கும் அர்னாவ் குழந்தையை நேரில் சென்று பார்க்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய குழந்தை மற்றும் மனைவி திவ்யா ஸ்ரீதர் பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார். அதில் நான் காதலுக்காக என்னுடைய பெற்றோரை எதிர்த்து குடும்பத்தை எதிர்த்து தான் வெளியே வந்தேன். ஆனால் அந்த காதலால் நான் அதிகமாக வேதனையை அனுபவித்து விட்டேன். இப்ப வரைக்கும் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தான் இனியும் திவ்யா உடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை அதே நேரத்தில் குழந்தையை வீடியோ காலிலாவது பார்த்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏற்கனவே நிறைய ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன். ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.
மேலும் தான் இனியும் திவ்யா உடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை அதை நேரத்தில் குழந்தையை வீடியோ காலிலாவது பார்த்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏற்கனவே நிறைய ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன். ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications