கடிதத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ராஜு...பாசம்..கண்ணீரை வரவழைத்து விட்டது
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ராஜு அழுததைப் பார்த்து ரசிகர்களின் மனமும் பதறி போய் விட்டதாம்.
எந்தப் பிரச்சினையிலும் தீர்க்கமான முடிவு எடுக்கும் இவர் வீட்டிலிருந்து வந்த கடிதத்தை பார்த்ததும் கண் கலங்கி போய் விட்டார்.
சோகத்தை வெளியே காட்டாமலே அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் காமெடி நடிகர்களுக்கும் சோகம் எட்டிப் பார்த்தால் இப்படித்தான் இருக்குமா என்று பலரும் கூறி வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் அதிகமான புதுமுக போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சிலர் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள் தான். அவர்களில ராஜுவும் ஒருவர். இவரை நகைச்சுவை நடிகராக சின்னத்திரையில் பலருக்கும் தெரியும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிகரிக்கும் பாசிட்டிவ் கமெண்ட்
சீரியலில் இவருக்கு அதிகமான பெண் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலை நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் இவருடைய ரசிகர்கள் மேலும் குஷியாகி விட்டனர். வந்த முதல் நாளில் இருந்து அனைவரையும் தன்னுடைய மிமிக்கிரி திறமையால் சிரிக்கவைத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு அபிப்ராயத்தை பெற்றுவிட்டார். இவருக்கு தொடர்ந்து அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகள் தான் வந்து கொண்டிருக்கிறது.

கடந்துவந்த சோக கதை
நடிகனாக இருக்கும் நாம் எப்போதுமே நம்முடைய கவலைகளையும், சோகத்தையும் வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது என்பது இவருடைய வாதமாக இருந்தது. அதனால்தான் இவர் முதல் வாரத்தில் நடைபெற்ற சோகமான சொந்தக் கதையை அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் போது இவர் கடந்து வந்த பாதையை இவர் ஜாலியாகவே கூறிவநதார். அது அவருடைய ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது.

பாசத்தை வெளிக்காட்டிய கண்ணீர்
அடுத்தடுத்த டாஸ்க்களில் இவர் தன்னுடைய திறமையால் ரசிகர்களின் மத்தியில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கும்போது, நேற்றைய ஸ்பெஷல் எபிசோடில் இவர் வீட்டிலிருந்து இவருக்கு கடிதமும் சாப்பாடும் வந்து இருந்ததை பார்த்ததும் அனைவரும் என்ன நடக்கும் என்று ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் இவரை அறியாமல் இவர் கண் கலங்கி அழுது விட்டார். அந்த அழுகையை மறைப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அது வெளிப்பட்டுவிட்டது .அதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே பீல் ஆகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications