இனி நீயா நானா தொகுப்பாளர் டிடி..? அவரே சொன்ன தகவல்.. கோபிநாத் என்ன சொல்லி இருக்கார் பாருங்க
சென்னை: தொகுப்பாளர் டிடி என்ற திவ்யதர்ஷினி சமீபத்தில் தான் தொகுத்து வழங்க ஆசைப்படும் நிகழ்ச்சி குறித்து பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் நீயா நானா நிகழ்ச்சி பற்றி டிடி சொன்ன கருத்துக்கும் பதிலுக்கும் கோபிநாத் தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன்.'

இந்த நிலையில் டிடி மற்றும் கோபிநாத் பேசிய வீடியோஸ் வைரல் ஆகி வரும் நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு அதிகமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த டிடி தன்னுடைய பயணத்தை ஸ்கூல் காலேஜ் படிக்கும்போது அங்கிருக்கும் மேடைகளில் தொடங்கி இருக்கிறார். தான் ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நிலையில் அவரிடமும் தொகுப்பாளராக மாறி, டிடி விஜயிடம் கேள்வி கேட்டு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தாராம்.
அப்படி இளம் வயதிலேயே தொகுப்பாளராக தன்னுடைய பாதையில் அடி எடுத்து வைத்த டிடிக்கு விஜய் டிவியில் டிடி வித் காபி என்ற நிகழ்ச்சி கிடைக்கும் போது பெரும் பிரச்சனைகளுக்கு இடையில் தான் கிடைத்திருக்கிறது. சேனல் தரப்பில் இருந்து டிடியை நம்பி அந்த நிகழ்ச்சி கொடுக்கலாமா என்று ரொம்பவே ஆரம்பத்தில் யோசித்து இருக்கிறார்கள். அதற்கு டிடி எனக்கு ஒரு எபிசோடு நடத்த மட்டும் வாய்ப்பு பாருங்கள் அது சரி இல்லை என்றால் நீங்கள் மாற்றிவிடலாம் என்று கூறிவிட்டு தான் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்.
ஆனால் டிடி எதிர்பார்த்தது போலவே அவர் தொகுத்து வழங்கிய விதம் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு டிடிக்கே கிடைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் டிடியும் தொகுப்பாளர் கோபிநாத்தும் ஒரு நிகழ்ச்சியில் மாறி மாறி இன்டர்வியூ எடுத்துக்கொண்டனர். அப்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் இனி நீ எந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்க வேண்டும் என்று நினைக்கிறாய் என்று கோபிநாத் டிடி இடம் கேட்கிறார்.

அதற்கு டிடி நான் எல்லா நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கியாச்சு. இன்னும் இருப்பது நீயா நானா நிகழ்ச்சி மட்டும் தான் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன் என்று சொல்லி கொண்டிருக்கிறார். அதற்கு டிடி ஆனால் உங்கள் மாதிரி என்னால் அதில், அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி பேசி நிகழ்ச்சியை கொண்டு போக முடியுமா என்று தெரியாது என்று கூறுகிறார்.
அத்தோடு நானும் ஒரு ரகசியத்தை சொல்லணும். இது நீ என்னுடைய நிகழ்ச்சியை பிடிச்சிருக்கு அதை நான் எடுத்து நடத்தணும் என்று சொன்னதால் நான் சொல்றேன் என்று நினைக்க வேண்டாம். ஆனால் எனக்கும் டிடி வித் காபி என்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க ரொம்பவே ஆசை. அந்த மாதிரி நிகழ்ச்சி இனி வந்தால் அதில் ஒரு முறையாவது தொகுத்து வழங்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று கோபிநாத் கூறி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
எந்த மனைவிக்கும் இப்படிப்பட்ட அவமானம் வரக்கூடாது.. ரவி மோகன் மனைவி ஆர்த்தி உருக்கம்.. விஜயுடன் ஒப்பீடு? -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications