இந்த "சமாச்சாரத்தை" வீட்டுக்குத் தெரியாம எப்படி... முடியுமா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் சந்தோஷின் நண்பன் ஜனனியிடம் ஊருல மரத்துல ஏறி கொய்யாக்காய் பறிச்சோமே, அந்த கொய்யாக்காய் ஏன் கசந்துச்சுன்னு கேட்கறான்.
அதுக்கு சந்தோஷ் சொல்றான்... டேய் அது கொய்யாக்கா இல்லடா, மாங்காய் புளிக்காம என்ன செய்யும்னு சொல்றான் சந்தோஷ். அந்த மாங்காய் பறிக்கும்போதுதான் ஜனனியைத் தூக்கிப் பிடிச்சுகிட்டான் சந்தோஷ்.
தன்னைத் தூக்கிப் பிடிச்சபோது சந்தோஷ் போட்டிருந்த அந்த ப்ளூ சட்டையைத்தான் பொக்கிஷமாக நினைத்து, சந்தோஷுக்குத் தெரியாம எடுத்து பீரோவில் ஒளிச்சு வைக்கறா ஜனனி.
தக்காளி, பப்பாளி, மண்டை.. எல்லாமே ஏடாகூடம்.. இதுக்குப் பேரு சீரியலா.. என்னாகப் போகுதோ!
மிரட்டல்
டேய் வக்கீல் பணம் கேட்டு மிரட்டறாண்டா... என்கிட்டே பணம் இல்லை, ஜனனி நகையை கூட அடகு வச்சாச்சுன்னு சொன்னதை ரெக்கார்ட் பண்ணி வச்சுக்கிட்டு, உங்க ரெண்டு பேர் அப்பாகிட்டயும் சொல்லுவேன், வீட்டுக்குத் தெரியுமா டிவோர்ஸுக்கு அப்ளை பண்றீங்கன்னு மிரட்டல் விடறாண்டா...
ஜனனியின் அப்பா
இதற்கிடையில் வக்கீல் வீட்டில் ஜனனியின் அப்பாவின் நண்பர் சந்தோஷையும், அவனது நண்பனையும் பார்த்துவிட்டு, ஜனனியின் அப்பாவிடம் சொல்ல, அவர் நேரே மாப்பிள்ளையிடம் வந்து விசாரிக்கிறார். அந்த வக்கீல் ரொம்ப மோசமானவராம், உங்க நண்பருக்காக நீங்க அவர் கூட போயிருப்பீங்க. அதனால், இனிமே அங்க போகாதீங்க. இதை உங்க நண்பருக்கும் சொல்லுங்க மாப்பிள்ளை. இதை சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன்னு சொல்லிட்டு போறார். அப்போ பார்த்து வக்கீலின் போன் வருகிறது.
மிரட்ட மாட்டான
அவன் மிரட்ட மாட்டாண்டா... ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சுச்சுன்னா அவனுக்கு எப்புடி பணம் கிடைக்கும், நம்புன்னு சொல்றான்.அந்த நேரம் அமீனா நோட்டீசுடன் வருவதாக போன் செய்கிறார்.
தயக்கத்துடன்
ஜனனி நீங்க யாருக்கும் தெரியாம போயி வாங்கிக்கறீங்களான்னு சந்தோஷ் கேக்கறான். சரி என்று ஜனனி சொல்ல, அமீனா தெருவுக்குள் என்ட்ரி ஆகிறார். இப்படியே கதை போகுது.
இவர்களின் விவாகரத்து சமாச்சாரம் எப்ப வீட்டுக்குத் தெரியும்?