Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் இசையை தொடாதே! 'டியூட்' படத்தில் "கருத்த மச்சான்” பாடலால் வந்த வினை! நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜா, தனது தனித்துவமான இசையால் உலகெங்கிலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி வருகிறார். இன்றும் டிஜிட்டல் தளங்களில் அவர் நிகழ்த்தும் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. யுடியூப் மியூசிக் தளத்தில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் அதிகமான மாதாந்திர ஆடியன்ஸைப் (Monthly Audience) பெற்று, இளையராஜா இணையத்திலும் தனது சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தியுள்ளார். இத்தகைய உச்சத்தில் இருக்கும் ஒரு கலைஞரின் இசைக்கு, அனுமதி இல்லாமல் கை வைத்தால், இளையராஜா விடுவாரா?

Ilaiyaraaja box office Pradeep Ranganathan

டியூட் படத்திற்கு எதிரான காப்புரிமை வழக்கு

சமீபத்தில் வெளியாகி வசூலைக் குவித்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' திரைப்படத்தில், இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இளையராஜா தரப்பு, தனது பாடலை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், 'டியூட்' திரைப்படம் தொடர்பாகத் தனியாக வழக்கு தொடரலாம் என்றும், படத்தைத் தொடர்ந்து திரையிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையில், இசையின் காப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பு உறுதியாக உள்ளது.

இளையராஜாவின் சட்ட போராட்டங்கள்

இளையராஜாவின் பாடல்கள் என்றால், அதன் ராயல்டி மற்றும் காப்புரிமை யாருக்குச் சொந்தம் என்பதில் அவர் எப்போதும் உறுதியாகவும், கவனமாகவும் இருப்பார். இந்த ஒரு படத்துக்கு மட்டுமல்ல, இதற்கு முன்பு வேறு பல படங்கள் மற்றும் இசை நிறுவனங்களுடனும் அவர் காப்புரிமைக்காகப் போராடியிருக்கிறார். இசையமைப்பாளரின் உழைப்பும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இளையராஜா தீவிரமாக இருக்கிறார். தனது இசையை, இசை நிறுவனங்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது மற்றவர்கள் பயன்படுத்தும் போது, அதற்கான உரிய அங்கீகாரமும், ராயல்டியும் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் சமரசம் செய்துகொள்வதில்லை.

முந்தைய வழக்குகள்

இளையராஜா தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, பல இசை நிறுவனங்களான சோனி மியூசிக், எக்கோ ரெக்கார்ட்ஸ், யூனிவர்சல் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள், பாடல்களின் உரிமை தொடர்பாகத் திரையுலகில் ஒரு முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தின.

இளையராஜாவின் இசை இன்றும் காலத்தைக் கடந்து நிற்கக் காரணம், அந்தப் பாடல்களின் ஆழமும், நேர்த்தியும்தான். தன்னுடைய கலையை வணிகத்திற்காக யாரும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் அவர் காட்டும் உறுதி, திரைத்துறையில் ஒவ்வொரு கலைஞரும் தங்கள் உரிமைகளைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

'டியூட்' பட விவகாரத்தில் இளையராஜாவின் காப்புரிமைப் போராட்டம் இப்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வழக்கு எப்படி முடிவடையும் என்பதைத் திரையுலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+