Kanmani Serial: வாடகைத் தாய் கதை இப்படியும் இருக்குமா?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் வாடகைத் தாய் கதையை இவங்க இஷ்டத்துக்கு கொண்டு போறாங்க.
கொஞ்சமாவது பிராக்டிகலா யோசிக்க வேணாமா? எல்லா கதையும் கொண்டு போகிற மாதிரியே நாங்களும் போறோம்னா எப்படி?
எத்தனை தவறுகள் இருக்கிறது என்று பூதக் கண்ணாடி வைத்து பார்க்க வேணாம்...ஆரம்பமே தப்புத்தான்.
கன்னிப் பெண்
கன்னிப் பெண் முத்துச்செல்வி ராதாவுக்கு பதில் வாடகைத் தாயாகலாம் என்று பேசி வைத்துக்கொண்டு, ராதாவாக நடிக்கறாளாம். ராதாவாக நடிக்கும் பெண் ஒரு குழந்தைக்கு தாயானவள். கன்னிப் பெண் முத்துச்செல்வி அவளுக்கு பதில் ராதாவாக நடித்து தாயாகிறேன் என்று நிற்கும்போது டாக்டருக்கு அதை கூட கண்டுபிடிக்கத் தெரியாதா?
Azhagu Serial: ரொம்ப நாளைக்கு பிறகு நடிகை ரேவதியை அழகம்மையா பாருங்க!
ஆரம்பமே தவறு
இப்படி தவறான ஒன்றை கதையில் காண்பிக்கிறோமே என்கிற கூச்சம் கதாசிரியருக்கோ இயக்குநருக்கோ இருக்காதா? டாக்டரை இவ்ளோ முட்டாளாக காண்பிக்கிறீர்கள். இதற்கு டாக்டர்கள் உங்களுக்கு கண்டனம் தெரிவித்தல் மட்டுமே நீங்கள் திருந்துவீர்கள் என்றால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது.அவர்களுக்கு ஆயிரத்தெட்டு ஜோலி இருக்கு.
இதெல்லாம் நாமாக
இதெல்லாம் நாமாக பார்த்து திருத்திக்க வேண்டியது. அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள்தானே என்றும், இதெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று நினைப்பதும் தொழிலுக்கு நீங்கள் செய்யும் துரோகம். எல்லாரும் செய்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் இது போல பல பிழைகளை செய்து வருகிறார்கள்.
வாடகைத் தாய்க்கு
வாடகைத் தாய்க்கு உதவிக்கு முத்துச்செல்வி போகிறேன் என்று அங்கு போய் தங்குகிறாளாம். அங்கு போனால், அவ புருஷன் கரண்ட் போயிருச்சுன்னு சொல்லி தனக்கு, தன் பொண்டாட்டிக்கு, குழந்தைக்கு என்று மூவருக்கும் விசிறிவிட சொல்கிறானாம். எந்த டாக்டருங்க இப்படி எல்லாம் வசதி செய்து கொடுக்கறாங்க?
கண்ணன் சஞ்சீவ்
தனக்கான வேலைகளை கச்சிதமாக செய்துவிடும் நடிகர் சஞ்சீவ்,கண்ணனாக இந்த சீரியலில் நடித்துவிட்டு... எடிட்டிங் பற்றி கேட்டு கேட்டு அறிந்துக் கொள்கிறார் என்று சொன்னார்கள். ஆனால், இவர்களை போன்றவர்கள் கதையிலும் கொஞ்சமா மூக்கை நுழைக்க வேண்டும் போலிருக்கிறது.
சீரியலுக்கு எப்படி வேண்டுமானாலும் கதையை எழுதுங்கள். ஆனால், மக்களை.. படித்தவர்களை முட்டாள் என்று நினைத்து கதையை எழுதாதீர்கள்.