விவாகரத்து பற்றி மீண்டும் வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவி.. பிரச்சனையோட ஆழம் வெளியே தெரியாது!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. அதற்கான பிரமோஷனில் ஜெயம் ரவி பேசிக்கொண்டு இருக்கும்போது அவருடைய விவாகரத்து குறித்து பொதுவெளியில் பேசப்படுவது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் தமிழ் சினிமாவே பொறாமைப்படும் வகையில் ஆரத்தி- ஜெயம் ரவி ஜோடி மிகவும் ஒற்றுமையான தம்பதிகளாக இருந்தனர்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய மனைவி உடனான விவாகரத்தை அறிவித்திருந்தார். அதற்கு அடுத்த நாளே ஆர்த்தி, விவாகரத்து முடிவு என்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. ரவியை எத்தனை முறையோ தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச நினைத்தேன். ஆனால் அதற்கு உடன்படவில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் ஆர்த்தி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆர்த்தி இன்னொரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் என்னுடைய அமைதி பலவீனமாகாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த நிலையில் ஜெயம்ரவி நடிப்பில் உருவான பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.
இதற்கான பிரமோஷன் வேலைகளில் ஜெயம் ரவி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் பல youtube சேனல்களிலும் பேட்டி கொடுத்து இருக்கிறார். அப்போது கலாட்டா சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய விவாகரத்து செய்திகள் குறித்து அதிகமாக பேசப்படுவது குறித்தும் பேசி இருக்கிறார்.

அதில் என்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசும் நபர்களை என்னால் தவிர்க்க முடியாது. நான் எது செய்தாலும் அது பேசும் பொருளாகும். மக்கள் சினிமாவைப் பற்றியும் நடிகர்கள் பற்றியும் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறார்கள். அதனால் அவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை.












Click it and Unblock the Notifications