பாக்கியலட்சுமி சீரியலில் இனி நடக்கப் போவது இதுதான்...அடுத்தபஞ்சாயத்து பெரிய சம்பவமாக இருக்கப் போகுது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனி அடுத்த பிரச்சனை என்ன என்பது பற்றி அந்த சீரியலின் ஜெனி தெரிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே எழில் மற்றும் அமிர்தா திருமண விஷயம் இனி பிரச்சனை ஏற்படுத்தும் நிலையில் வீட்டுக்கு உள்ளேயும் புது பிரச்சனை ஏற்பட போகிறதாம்.
சமீபத்தில் தான் ஜெனிக்கு வளைகாப்பு பங்க்ஷன் நடத்தி இருந்தனர். இனி குழந்தை பிறந்ததும் நடக்கப்போகும் பிரச்சினையை பற்றி அவர் கூறியிருக்கிறார்.

ஜெனியின் வளைகாப்பு
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான கதைகளும் தொடங்கி இருக்கிறது. அடங்கி இருந்து தற்போது தன்னையும் கவனித்துக் கொள்ள தொடங்கி இருக்கிறார். இன்று முதல்முறையாக பியூட்டி பார்லர் சென்று தன்னுடைய முடி நிறத்தை மாற்றி, தன்னையும் கவனித்துக் கொள்ள தொடங்கி இருக்கும் பாக்கியலட்சுமி எவ்வளவு பிரச்சனைகள் தன்னுடைய வியாபாரத்திலும் தொழிலும் நடந்து வந்தாலும் அதை பற்றி தன்னுடைய கவலையை வெளியே காட்டிக் கொள்ளாத கேரக்டரை ரசிகர்கள் அதிகமாக ரசிக்க தொடங்கி இருக்கின்றனர். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஜெனிக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு நடந்து இருக்கிறது. அதில் கோபி ராதிகாவோடு பாக்கியா வீட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

பியூட்டி பார்லர் சந்திப்பு
ராதிகா வீட்டிற்கு வந்தாலும் எந்த பதிலும் கூறாமல் பாக்யா இருந்த நிலையில் தற்போது பியூட்டி பார்லர் ராதிகா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கை ரொம்பவே மாறிவிட்டது. அதிகமாக வேலை இருக்கிறது. நினைத்த மாதிரி திருமண வாழ்க்கை இல்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார். இதை அங்கே இருக்கும் பாக்கியா கேட்டுவிட்டாலும் அதைப்பற்றி எதுவும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் இதுவரைக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்தவர்கள் வீடு தான் முக்கியம் என்று இருந்த பாக்கியா இப்போ பியூட்டி பார்லர் வரைக்கும் வர்ற தொடங்கிட்டாங்களா என்று ராதிகா நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து திருமணத்தில் பிரச்சனை
ஏற்கனவே எழில் திருமண விஷய பிரச்சனை இனி அடுத்ததாக வர இருக்கும் நிலையில் அதை தொடர்ந்து ஜெனியின் குழந்தையை வைத்தும் புது பிரச்சனை வர இருக்கிறது என்று சமீபத்தில் ஜெனி கேரக்டரில் நடிக்கும் திவ்யா கணேஷ் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதாவது என்னை அடுத்ததாக ஜெனிக்கு குழந்தை பிறக்க இருக்கிறதாம். அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று அதைக் குறித்து ஒரு சண்டையை நடத்த போகிறதாம். ஏற்கனவே ஜெனியின் அம்மா கிறிஸ்தவ பெயர் வைக்க வேண்டும் என்று கூற, அதுவெல்லாம் கிடையாது நம்ம குடும்ப வழக்கப்படி தான் பெயர் வைக்க வேண்டும் கோவிலில் தான் மொட்டை போட வேண்டும் என்று ஈஸ்வரி பிரச்சனையை தொடங்கியிருந்தார்.

அடுத்த பிரச்சனை ரெடி
அந்த வகையில் தற்போது குழந்தையை வைத்து அடுத்த பிரச்சனைக்கு இப்போதே இயக்குனர் ரெடி செய்து விட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, இது எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருப்பதாகவும் கருத்து கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களுக்கு எழிலின் திருமண விஷயமே இழுத்துக் கொண்டுதான் சென்று கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து தான் எழில் பிரச்சனைக்கு பிறகு ஜெனியின் குழந்தை பிரச்சனை வர இருக்கிறது என்று ஒரு க்ளூவும் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications