காலில் விழுந்து கேட்கிறேன்.. யாழ்ப்பாணத்தில் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட கலா மாஸ்டர்.. என்னாச்சு?
சென்னை: உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன், தயவு செய்து அமைதியாக இருங்கள் என இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ரசிகர்களிடம் நடன இயக்குநர் கலா மாஸ்டர் மன்றாடி கேட்டார்.
நடிகை ரம்பா இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐரோப்பாவில் வாழும் இந்திரன், யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நோர்தன் யூனி என்ற பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டன.

இந்த பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்த ஹரிஹரன் தலைமையில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடன கலைஞர் கலா மாஸ்டர் தெரிவித்திருந்தார்.
நிகழ்ச்சியில் பங்கு பெற நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் யோகி பாபு, ரெடிங்டன் கிங்ஸ்லி,டிடி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் ரசிகர்களுக்கு இலவசம் என்றாலும் விஐபிக்களுக்கு டிக்கெட் வசூலிக்கப்பட்டது.
அந்த பணத்தை கல்விக்கு செலவிடுவது என ரம்பா கணவர் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஜரூராக தொடங்கியது. அப்போது விஐபிக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு தடுப்புகளை தாண்டி சில இளைஞர்கள் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களை போலீஸார் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
அது போல் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்ய அமைக்கப்பட்ட மேடைகளிலும் ஏராளமான ரசிகர்கள் பாதுகாப்பற்ற முறையில் நின்றுக் கொண்டனர். அப்போது கலா மாஸ்டர் "உங்களை பார்க்கத்தானே நாங்கள் வந்துள்ளோம். ஒத்துழைப்பு தாருங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். எல்லாரும் கொஞ்ச நேரத்திற்கு பொறுமையாக இருங்கள் என கோரியும் அங்கிருந்தவர்கள் கேட்கவில்லை. இதனால் இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications