Kalyana veedu serial: அச்சச்சோ அபத்தமான வசனம் ... இப்படியுமா எழுதுவாங்க?
சென்னை: திருமுருகன் சீரியலான கல்யாண வீடு சீரியலில் புருஷனோட சேர்ந்துட்ட ஸ்வேதாவுக்கு பிரச்சனையாம்.
அதனால், மறுபடியும் கோபி ஸ்வேதாமேல மேல பரிதாபப்பட்டு வாழ்க்கை குடுக்கறேன்னு போயிருவாரோன்னு பயம்னு...
சூரியாவோட அப்பா வசனம் பேசறாருங்க...இது அபத்தமா இல்லை?

கல்யாண வீடு சீரியல்
சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ஸ்வேதாவின் புருஷன் 5 வருஷமா காணாமல் போயிடறார். ஏதோ கூடவே இருக்கும் கோபி மேல ஆசை வருது. ஸ்வேதாவின் அண்ணனுக்கும் கோபி மாதிரி ஒருத்தன் கிடைச்சா தங்கச்சி வாழ்க்கை நல்லாருக்குமேன்னு தோணுது. கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு நினைக்கறார்.

ஸ்வேதா புருஷன்
காலப் போக்கில் ஸ்வேதா புருஷன் திரும்பி வந்துடறார். அவளும் புருஷன்தான் அரசன்னு நினைச்சு ஏத்துக்கிட்டு வாழும்போது கலா அண்ட் சிஸ்டர்ஸ் கோபியுடனான ஸ்வேதாவின் பழக்க வழக்கத்தை தப்பா ஒண்ணுமே நடக்கலை ஆனா இட்டுக்கட்டி சொல்லிடறாங்க. அதனால் ஸ்வேதா குடும்பத்தில் குழப்பம்.

கேவலமான டயலாக்
கோபிக்கு இந்த விஷயம் தெரிய வரும்போது கலா அன்ட் சிஸ்டர்ஸை கழிவி கழுவி ஊத்தறார். இதை கேட்டுகிட்டு இருந்த சூர்யாவின் அப்பா என்ன வருத்தப் படறார்னா... கோபி இளகிய மனம் படைச்சவராம்.. ஸ்வேதா புருஷன் அவளை விட்டுட்டு மறுபடியும் போயிட்டாருன்னா.. அவளுக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு கோபி மறுபடியும் கிளம்பிட்டா மகள் சூரியா வாழ்க்கை என்னாவது என்று வசனம் பேசுகிறார்.

இளகிய மனம்
ஏங்க உங்களுக்கு இளகிய மனம் இருந்து நீங்க ஆயிரம் பெண்களுக்கு வாழ்க்கை குடுக்க தயாராக இருக்கலாம். புருஷனை விட்டுட்டு உங்களை ஏத்துக்க எல்லா பெண்களும் தயாரா இருப்பாங்களா?வசனம் எழுதும்போது பார்த்து எழுத மாட்டீங்களா? குடும்ப கதைக்கு இப்படித்தான் அபத்தமா வசனம் எழுதுவீங்களா?

திருமுருகனுக்கு உரைக்காது
தனது சீரியலில் எந்த தவறை எப்படி சுட்டிக் காட்டினாலும் திருமுருகனுக்கு உரைக்காது. கண்ணு தெரியாது காது கேட்காது என்று பயணிப்பார். கலா அண்ட் சிஸ்டர்ஸ் கதாபாத்திரத்தை கேவலமா கொண்டு போறார். எல்லாத்துக்கும் சேர்த்து மறுபடியும் சானல் மூலமா மன்னிப்பு கேட்க சொல்லும்போது கண்களை சிமிட்டிக்கிட்டே மன்னிப்பு கேட்பார்.
எத்தனை முறை சுட்டிக் காட்டியும் இன்னும் அடுத்தவன் பொண்டாட்டி ஸ்வேதாவோட கோபி இருக்கும் போஸ்டரை மாற்றாதது ஏன்?












Click it and Unblock the Notifications