பாண்டியன் ஸ்டோரை விட்டு விலகும் கயல் பாப்பா.. இனி கதை இதுதானா? எதிர்பாராத திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கயல் பாப்பா பற்றி அவருடைய அம்மா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து நான்கு வருடங்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கயல் நடித்து வருகிறார்.

கயல் பாப்பாவின் நிஜப்பெயர் ஹாசினிதானாம்.

 Kayal Papa leaves Pandian Stores Is this the story anymore?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது அடுத்தடுத்து பிரிந்து போய் இருக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் வந்திருக்கிறது.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டனர். அந்த வகையில் இந்த சீரியலில் குட்டி குழந்தையாக அதாவது மீனா மற்றும் ஜீவாவின் மகள் கேரக்டரில் கயல் பாப்பாவாக நடித்து வரும் ஹாசினியும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்த சீரியலில் ஹாசினி பிறந்த கொஞ்ச நாட்களிலே நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 Kayal Papa leaves Pandian Stores Is this the story anymore?

ஆரம்பத்தில் கயல் பாப்பாவாக ஆண் குழந்தை தான் நடிக்க வைத்திருந்தார்களாம். அந்த குழந்தை அடிக்கடி அழுது கொண்டே இருக்கிறது என்பதால் அந்த குழந்தையை மாற்றிவிட்டு ஹாசினியை நடிக்க வைத்திருக்கிறார்கள். இப்போது வரைக்கும் கயல் கேரக்டரில் ரசிகர்களை மட்டுமல்லாமல் அந்த சீரியல் நடிக்கும் பிரபலங்களையும் கவர்ந்திருக்கிறார். அதனால் தான் அந்த சீரியல் நடிகர்கள் கயல் பாப்பாவோடு எடுக்கும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருவார்கள்.

இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து கயல் பாப்பா விளக்குவதாக தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து சமீபத்தில் அவருடைய அம்மா பேட்டி ஒன்றில் அப்படித்தான் பேசி இருக்கிறார்கள், இனி அதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி இருக்கும்போது கயலுக்கு பதிலாக அவருடைய அக்கா நடிப்பதற்காக கேட்டிருக்கிறார்கள். நாங்களும் சரி என்று சொல்லி இருக்கிறோம். கயலின் அக்காவும் நடிப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

 Kayal Papa leaves Pandian Stores Is this the story anymore?

இந்த நிலையில் இந்த சீரியல் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று தகவல்கள் ஏற்கனவே பரவி வந்தது. அதை நிரூபிப்பது போல தான் இப்போது கண்ணனுக்கு உதவி செய்வதற்காக கதிர் பேங்க் ஆபீஸர்களை அடித்ததால் ஜெயிலில் இருக்கிறார். கதிரை வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காக ஜீவாவும் மூர்த்தியிடம் பேசி அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

மூர்த்திக்கு தான் கண்ணன் மீது கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இனி கண்ணன் அந்த பேங்க் ஆபிஸர்ஸ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பிறகு கதிரை வெளியே எடுத்து மொத்த குடும்பமும் ஒன்று சேர்க்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தனத்திற்கு ஏற்கனவே அடிக்கடி நெஞ்சுவலி வந்து கொண்டிருப்பதால் தனம் உடல்நிலை சரியில்லாமல் போகவே அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே வீட்டில் மீண்டும் வாழ்வதோடு இந்த கதை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+