கயல் சீரியல் நடிகை தற்கொலையில் திருப்பம்.. கணவர் உருக்கமாக வெளியிட்ட பதிவு!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சுபாஷினியின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கலில் இருக்கும் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, உயிரிழப்பதற்கு முன்பு கணவர் பிபின் சந்திராவுடன் வீடியோ கால் மூலம் பேசியிருந்ததாக கூறப்படுவது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது.

ரசிகர்கள் கருத்து
இந்த சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பலரும் நேரடியாக பிபின் சந்திராவையே குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். "என்ன நடந்தது?", "ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்?" என்ற கேள்விகளுடன், சிலர் அவரை கடுமையாக திட்டியும் வருகின்றனர். எந்த தகவலும் உறுதியாக தெரியாத நிலையிலும், ஊகங்களின் அடிப்படையில் கருத்துகள் பரவி வருகிறது.
நடிகையின் கணவர் பதிவு
இதற்கிடையில், பெங்களூரில் வசித்து வரும் பிபின் சந்திரா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட உருக்கமான பதிவு தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், சுபாஷினியை இழந்த வேதனையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். "நீ இல்லாமல் நான் இல்லை", "நான் இதை நம்ப முடியவில்லை", "நீ இன்னும் என்னுள் வாழ்கிறாய்" போன்ற வார்த்தைகளால் அவர் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்ற முக்கிய தினங்களை ஒன்றாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆசையையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடந்தது என்ன
இதனால், ஒரு பக்கம் பிபினை குற்றம் சாட்டும் குரல்கள் எழுந்தாலும், மற்றொரு பக்கம் அவர் உண்மையிலேயே துயரத்தில் இருக்கிறார் என்ற அனுதாபக் குரலும் எழுந்து வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் கருத்து வேறுபாடு தெளிவாக தெரிகிறது.

கயல் சீரியல் நடிகை இன்ஸ்டா பதிவு
மேலும், சுபாஷினியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவுகளும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அவற்றைப் பார்த்த ரசிகர்கள், "இவ்வளவு சந்தோஷமாக இருந்தவர் திடீரென இப்படிச் செய்வாரா?" என்று குழப்பம் தெரிவித்து வருகின்றனர். அவரும், கணவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால், அவர்களுக்குள் பெரிய பிரச்சனை இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என பலர் கூறுகின்றனர்.
வழக்கு விசாரணை
இதனால், உண்மையில் என்ன பிரச்சனை நடந்தது, அந்த வீடியோ காலில் என்ன பேச்சு நடந்தது, ஏன் இப்படியான கடுமையான முடிவை எடுத்தார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முழு உண்மை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்













Click it and Unblock the Notifications