கயல் சீரியல் நடிகை தற்கொலையில் திருப்பம்.. கணவர் உருக்கமாக வெளியிட்ட பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சுபாஷினியின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கலில் இருக்கும் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, உயிரிழப்பதற்கு முன்பு கணவர் பிபின் சந்திராவுடன் வீடியோ கால் மூலம் பேசியிருந்ததாக கூறப்படுவது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது.

Kayal Serial Subashini Sun TV

ரசிகர்கள் கருத்து

இந்த சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பலரும் நேரடியாக பிபின் சந்திராவையே குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். "என்ன நடந்தது?", "ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்?" என்ற கேள்விகளுடன், சிலர் அவரை கடுமையாக திட்டியும் வருகின்றனர். எந்த தகவலும் உறுதியாக தெரியாத நிலையிலும், ஊகங்களின் அடிப்படையில் கருத்துகள் பரவி வருகிறது.

நடிகையின் கணவர் பதிவு

இதற்கிடையில், பெங்களூரில் வசித்து வரும் பிபின் சந்திரா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட உருக்கமான பதிவு தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், சுபாஷினியை இழந்த வேதனையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். "நீ இல்லாமல் நான் இல்லை", "நான் இதை நம்ப முடியவில்லை", "நீ இன்னும் என்னுள் வாழ்கிறாய்" போன்ற வார்த்தைகளால் அவர் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்ற முக்கிய தினங்களை ஒன்றாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆசையையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடந்தது என்ன

இதனால், ஒரு பக்கம் பிபினை குற்றம் சாட்டும் குரல்கள் எழுந்தாலும், மற்றொரு பக்கம் அவர் உண்மையிலேயே துயரத்தில் இருக்கிறார் என்ற அனுதாபக் குரலும் எழுந்து வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் கருத்து வேறுபாடு தெளிவாக தெரிகிறது.

Kayal Serial Subashini Sun TV

கயல் சீரியல் நடிகை இன்ஸ்டா பதிவு

மேலும், சுபாஷினியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவுகளும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அவற்றைப் பார்த்த ரசிகர்கள், "இவ்வளவு சந்தோஷமாக இருந்தவர் திடீரென இப்படிச் செய்வாரா?" என்று குழப்பம் தெரிவித்து வருகின்றனர். அவரும், கணவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால், அவர்களுக்குள் பெரிய பிரச்சனை இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என பலர் கூறுகின்றனர்.

வழக்கு விசாரணை

இதனால், உண்மையில் என்ன பிரச்சனை நடந்தது, அந்த வீடியோ காலில் என்ன பேச்சு நடந்தது, ஏன் இப்படியான கடுமையான முடிவை எடுத்தார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முழு உண்மை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+