5 ரூபாய் சம்பளம், தினக்கூலியான வாழ்க்கை.. கோலங்கள் சீரியல் நடிகருக்கு இந்த நிலைமையா?
சென்னை: கோலங்கள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அபிஷேக் சங்கர் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதோடு சினிமா துறைக்கு தான் வருவதற்கு முன்பு என்ன மாதிரி வேலை செய்து கொண்டிருந்தேன் என்பதைப் பற்றியும் அபிஷேக் சங்கர் பகிர்ந்து இருக்கிறார்.
ஐந்து ரூபாய் சம்பளத்தில் தினக்கூலியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி காதல் திருமணம் செய்து கொண்டது குறித்து அபிஷேக் சங்கர் பகிர்ந்திருக்கும் தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அது பற்றி பார்ப்போம்.

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியல் ஆக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் படியே அவர்களுடைய வாழ்க்கை இருக்கும் என்று நாம் நினைத்து வருகிறோம். ஆனால் நடிப்பு என்பது வேறு நிஜ வாழ்க்கை என்பது வேறு என்று பலர் பேசும் போது தான் தெரிகிறது. அந்த மாதிரி தான் கோலங்கள், புது புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அபிஷேக் சங்கர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்து இருக்கும் தகவல் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
அதாவது ஞானசேகரன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான மோகமுள் என்ற படத்தின் மூலமாகத்தான் அபிஷேக் சங்கர் அறிமுகமாகி இருந்தார். அதற்குப் பிறகு பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதோடு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மொழிகளிலும் அபிஷேக் சங்கர் நடித்து வந்தார். 2010 ஆம் ஆண்டு கதை என்ற படத்தை இயக்கி இருந்தார்.
அதுபோல சின்ன திரையில் 2003 ஆம் ஆண்டிலிருந்து சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் என்று சீரியலில் தேவயானியோடு நடித்திருந்தார். சீனிமா சீரியல் என்று நடித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்கு வரும்போது இவருக்கு சினிமா பின்புலம் கிடையாதாம்.
தினகூலி வேலைக்காரராக தான் இருந்திருக்கிறார். முதல் படம் நடித்த பிறகு அந்த படம் ரிலீஸ் ஆகுமா என தெரியாமல் தான் அபிஷேக் ராஜா மேற்கு மாம்பழத்தில் ஒருவருக்கு டிரான்ஸ்லேட் பண்ற வேலையை பார்த்து இருக்கிறார்.ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழிமாற்றம் செய்து கொடுத்தால் ஒரு பக்கத்துக்கு ஐந்து ரூபாய் பணம் கிடைக்குமாம்.
ஒரு பத்து பக்கம் பண்ணி கொடுத்துவிட்டு கிடைக்கும் 50 ரூபாயை வாங்கிக்கொண்டு நேராக தேவி தியேட்டருக்கு அபிஷேக் ராஜா சென்று விடுவாராம். அங்கு படம் பார்த்துவிட்டு அங்கே இருந்து நடந்து சின்மயா நகருக்கு வருவாராம். படம் பார்த்த இரண்டு ரூபாய் 90 காசு போக மீதி பணம் இருக்குமாம். அதை சேர்த்து வைத்துக் கொண்டிருப்பாராம். அந்த நேரத்தில் தான் அபிஷேக் சங்கர் காதலித்துக் கொண்டிருந்தாராம்.
இப்போது அவர் திருமணம் செய்திருக்கும் பெண்ணை தான் எட்டு வருடமாக அபிஷேக் சங்கர் காதலித்திருக்கிறார். அதுபோல அபிஷேக் சங்கரின் மனைவி பெரிய பணக்கார வீட்டு பெண்ணாம். வசதி வாய்ப்புகள் மற்றும் பெரிய அளவில் பின்புலம் இருந்தாலும் அவர் சங்கரை காதலித்திருக்கிறார். அவர் மும்பையில் இருந்ததால் அபிஷேக் சங்கர் ஒவ்வொரு வாரமும் அவரிடம் போன் பேசுவதற்காகவே தான் சேர்த்து வைத்திருந்த காசு எல்லாம் செலவாகிவிடுமாம். ஆனாலும் அந்த ஒரு நாளுக்காகவே நான் காத்திருப்பேன் என்றும் அபிஷேக் சங்கர் பேசி இருக்கிறார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications