Kpy பாலா காதலிப்பது இந்த சீரியல் நடிகையா? மேடையிலே ப்ரபோஸ் செய்து விட்டாரே.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சீரியல் நடிகை சோபனாவை தான் காதலிப்பதாக கூறி அவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இணையத்தில் அதிகமாகும் கொண்டாடப்படும் நடிகராகவும், சமூக ஆர்வலராகவும் kpy பாலா இருந்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகு பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இப்போது திரைப்படங்களிலும் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தனக்கு கிடைக்கும் சின்ன வருமானத்திலும் அதிகமாக உதவி செய்து வரும் பாலா இணையத்தில் அதிகமானவர்களால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோ, வாகன வசதி இல்லாத ஊருக்கு ஆம்புலன்ஸ், விவசாயிகளுக்கு உதவி என்று பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் பாலா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது சீரியல் நடிகை சோபனா அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் முத்தழகுவாக நடித்துக் கொண்டிருக்கிறாரே அவர்தான். அவரை தான் காதலிப்பதாக பாலா கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியை தான் அடைந்து இருப்பார்கள்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பாலா ஒரு பொண்ணை காதலித்து வருவதாகவும் ஆனால் அந்த பொன் வீட்டில் பாலா கிடைக்கும் வருமானத்தை எல்லாம் உதவியே செய்து விடுவதால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாலா என இப்போது சோபனாவிடம் நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை வாழ்க்கை முழுக்க நன்றாக பார்த்துக் கொள்வேன்.

நம்முடைய திருமணத்திற்கு பிறகு எங்க அம்மா என்ன சொன்னாலும் நான் அதை கண்டு கொள்ள மாட்டேன். அதுபோல நீ எங்க அம்மாவை பற்றி என்ன சொன்னாலும் நான் அதையும் கண்டு கொள்ளாமல் இருவருக்கும் நடுநிலையாக இருப்பேன் உன்னுடைய கனவுகளுக்கு நான் துணையாக தான் எப்போதும் இருப்பேன். நீ என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறியா? என்னுடைய காதலுக்கு நீ சம்மதம் சொன்னால் நம்முடைய திருமணத்திற்கு இன்விடேஷன் அடிக்க சொல்லி விடலாம்.

அதே நேரத்தில் தனியார் சேனலில் நம்முடைய திருமண வீடியோவை விற்று விட்டால் அதில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்துவிடும். அவர்களே நம்ம திருமணத்தில் இலையில் தண்ணீர் தெளிப்பதில் இருந்து கிடா வெட்டுவது, வருகிறவர்களுக்கு பன்னீர் தெளிக்கிறது வரைக்கும் எல்லாவற்றையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டு விடுவார்கள் என்று ரோபோ சங்கரை தாக்கி பேசுவது போல பேசி இருக்கிறார்.
முதலில் இதற்கு கன்வென்சாகாமல் இருந்த ஷோபனா கடைசியில் உன்னை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்று தன்னுடைய காதலை பாலாவின் கையில் இருந்த ரோஸை பிடிங்கி அவருக்கே கொடுத்து தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் இது நிஜத்தில் பாலா காதலித்து அந்த நடிகையிடம் தன்னுடைய காதலை சொன்னாரா? அல்லது நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக இப்படி பேசினாரா? என்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications