ஜிகினா சேலையில்.. சொக்க வைத்த இடுப்பழகி.. லீசா.. தர்ஷாவுக்கு செம போட்டி!
சென்னை: ஜிகினா சேலையில் தன்னுடைய மொத்த இடுப்பு அழகையும் காட்டி செப்பு சிலை போல போஸ் கொடுத்து இணையதளத்தை கலங்கடித்து வரும் லீசா திரைப்பட நடிகைகளுக்கு டப் கொடுத்து இணையதளத்தை அலற வைத்து வருகிறார்.
விட்டால் தர்ஷா குப்தா, ஷிவானி நாராயணன் ஆகியோரது இடுப்புகளுக்கு இவர் கடும் போட்டியைக் கொடுப்பார் போலயே என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
சன் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான கண்மணி சீரியல் சௌந்தர்யாவாக கலக்கிக் கொண்டிருக்கும் லீசா இவ்வளவு நாளா தன்னுடைய கலக்கலான ஆட்டங்களில் டப்ஸ்மேட்ச் களிலும் இணையதளத்தில் கலக்கி வந்தார்.
எனக்கெல்லாம் கவர்ச்சி கண்ணுலதான் இருக்கு.. கவர்ந்திழுக்கும் காயத்ரி!
கடும் போட்டி
ஆனால் தற்போது கதாநாயகிகளுக்கு போட்டியாக போட்டோ போட்டிக்கு நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக் கொண்டிருக்கிறது போல இணையதளத்திலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இவர் மாடல் உடையில் போஸ் கொடுத்து இருப்பதை விடவும் புடவையில் தான் அதிகமாக போட்டோஸ்கள் பதிவிட்டு வருகிறார்.
சேலையில் கலக்கல் போஸ்
அதுவும் இப்ப போட்டிருக்கும் இந்த மரூன் கலர் சாரி இவர் கலருக்கு தூக்கலாக இருக்கிறது. சீரியலில் படு பவ்வியமாக கண்ணன் மாமாவின் மீது உயிரையே வைத்திருக்கும் இவருக்கு பொதுவாக சீரியல் பார்க்கும் பழக்கமே கிடையாதாம். ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது திருமதி செல்வம் சீரியல் அப்பப்ப பார்த்து இருக்கிறாராம் .அந்த சீரியலில் நடித்த வருடன் தான் நடிப்போம் என்று கனவில்கூட அவர் நினைக்கவில்லையாம்.
ரொம்ப ஜாலி
இந்த சீரியலில் இவருக்கு கூட நடிப்பது ரொம்பவே ஜாலியாக இருக்கிறதாம். இவர் சேலையில் சிறுத்தை பட தமன்னா அளவிற்கு போஸ் கொடுத்து இடுப்பை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தி அந்த போட்டோ வைரலாகப் பரவி வரும் நிலையில் இவர் அதற்கு அடுத்ததாக மாடல் உடையில் காபி கப்போடு தூங்கி முழித்த வேலையில் இருக்கிறேன் என்று ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார் அதுவும் வைரலாக பரவி வருகிறது.
சினிமாவிலும் நடிப்பு
இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்திருக்கிறார் பலே வெள்ளைய தேவா படத்தில் அறிமுகமாகி பொதுநலன் கருதி, மடைதிறந்து, என் அன்புள்ள லிசா, தெறிக்க விடலாமா போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இதில் என் அன்புள்ள நிஷா படத்தில் லிசா என்னும் பேயாக நடித்திருக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காததால் சீரியலில் குதிக்க முடிவு எடுத்திருந்தார்.
சன் டிவி அழைப்பு
அந்த நேரத்தில் சன் டிவியில் இருந்து அழைப்பு வந்ததும் உடனே சரி என்று ஒத்துக் கொண்டார். கண்மணி சீரியல் இப்படி தனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்று அவர் நினைத்துக் கூட பார்த்தது இல்லையாம். அந்த அளவுக்கு மக்கள் மனதைப் பிடித்துக் கொண்டது பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் லீசா.
இதைப் பாருங்க
அட அதை விடுங்க பாஸ், தூங்கி முழித்ததும் அவர் முட்டுக்கு மேலே தெரியும் அளவிற்கு ஒரு ஆடையை போட்டுக்கொண்டு மேக்கப் எதுவும் இல்லாமல் கண்களை மூடி ரசித்தபடி காபி அருந்துவது பல ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறதாம். இவரை விதவிதமாக ரசிச்சு பல ரசிகர்கள் கமெண்ட் மழையை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.. இதுதான் இப்ப வைரலாகி ஓடிக் கொண்டிருக்காம்.. !