லெப்ட் சைடு ஓபன் பண்ணி.. ரைட் சைடில் குட்மார்னிங் போட்ட லீசா...!
சென்னை : அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஒரு பக்கம் சட்டை பட்டனை கழட்டி விட்டு கையை தூக்கி காற்று வாங்கி போஸ் கொடுத்துள்ளார் நடிகை லீசா எக்லேர்ஸ்.
வெயிலின் கொடுமை அந்த அளவுக்கா இருக்கிறது .இப்படி போஸ்ட் போட்டா உங்களுக்கு சூடு குறைந்து பார்ப்பவர்களுக்கு சூடு ஏறிடுமே ...என ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.
வெள்ளை உடையில் கொள்ளை கொள்ளும் சிரிப்பால் பார்ப்பவர்களை உருக வைத்திருக்கும் லிசா, நடிப்பிலும் அசத்தியவர்தான்.
குப்புறடித்த ஷிவானி.. என்னாமா பண்றாருய்யா... வியர்த்து விறுவிறுத்துப் போன ரசிகர்கள்!
செளந்தர்யா
லீசா எக்லேர்ஸ் என்னும் பெயரை சொன்னால் யாருக்கும் ஞாபகத்திற்கு வராது .ஆனால் கண்மணி சீரியல் சௌந்தர்யா என்று சொன்னால் டக்கென்று நினைவிற்கு வந்து விடுவார் .ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பேரையும், புகழையும் இவருக்கு இந்த கண்மணி சீரியல் வாங்கி கொடுத்துவிட்டது .
கண்ணன் மாமாவின் கண்மணி
சீரியலில் சவுண்டாக இவர் கண்ணன் மாமாவின் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் ஒட்டிக் கொண்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலுக்கு பல ரசிகர்கள் அடிமைகளாக மாறிவிட்டனர். தற்போது இந்த சீரியல் முடிவடைந்து இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் இதில் நடித்தவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர் .அதிலும் அதன் கதாநாயகியை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது .
வாழ்ந்து விட்டார்
அந்த அளவுக்கு சீரியலில் நடிக்க சொன்னால் இவர் வாழ்ந்திருக்கிறார். இரண்டு வருடத்திற்கு மேலாக இந்த சீரியலில் இவர் நடித்தால் ரசிகர்களுக்கு பரிச்சயமாகி விட்டார். இவர் பலே வெள்ளையத்தேவா என்னும் படத்தில் அறிமுகமாகி பொதுநலன் கருதி, மடைதிறந்து, அன்புள்ள லீஷா என பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இதில் கிடைக்காத ரசிகர்கள் பட்டாளத்தை சீரியலில் இவர் பெருக்கி விட்டார் .
இன்ஸ்டாவில் அசத்தல்
ஆனால் சீரியலையும் தாண்டி சமூக வலைத்தளத்தையும் கலக்கி வருகிறார். சீரியல் நடிகைகள் பலரும் மாடலாக இருப்பது போல இவரும் மாடலிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார். என்னதான் நடிகையாக இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தால்தான் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருவார்கள் .இல்லையென்றால் திரைப்படங்களிலும் சீரியலில் நடிக்கும்போது மட்டுமே அவர்களை யாருக்கும் தெரியும் .
மறக்க விடக் கூடாது
அதில் இருந்து இவர்கள் விலகி விட்டால் ரசிகர்களும் மறந்துவிடுவார்கள். ஆனால் லீஷா அப்படி அல்ல .இந்த சீரியல் முடிவடைந்தாலும் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆக்டிவாக வலம் வருகிறார். இவரை புது சீரியலில் எப்போது பார்க்கலாம் என காத்திருக்கும் ரசிகர்களுக்காக தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார். அதில் வெள்ளை கலர் சட்டை போட்டுக்கொண்டு விதவிதமாக போட்டோ எடுத்து பார்ப்பவர்களின் மனதை உடைத்திருக்கிறார் .
ஜம்முன்னு போட்டோஸ்
சீரியலில் மட்டும்தான் புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்து விளக்கு மாடலிங் என்று வந்துவிட்டால் மனதை மயக்கும் தேவதைதான் என பார்ப்பவர்களை புலம்ப விட்டிருக்கிறார். ஒயிட் கலர் தான் இவருடைய ஃபேவரைட் கலர் என்பதால் தற்போது ஒயிட் கலர் ஷார்ட்டில் சட்டை பட்டன்களை திறந்து விட்டு லெஃப்ட் ,ரைட் என ஒவ்வொரு பக்கமாக திறந்து காட்டி ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறார் . இவர் என்னதான் கவர்ச்சியாக போட்டோ வெளியிட்டு இருந்தாலும் அதுல அந்த சிரிப்பு தான் ஹைலைட் என்று சிலர் கொஞ்சி வருகின்றனர்.