ஜாய் கிரிஸில்டாவை வெறுப்பேற்ற மாதம்பட்டி ரங்கராஜன் போட்ட போஸ்ட்! ஸ்ருதியும் பகிர்ந்திருக்கிறாரே! விசேஷம் போல
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவருடைய முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜன் இருவரும் தாங்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பலர் ஜாய் கிரிஸிட்டில்லாவிற்க்கு பகிர்ந்து வருகிறார்கள்.
நடிகரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய செய்திகள் தான் சோசியல் மீடியாவில் சில மாதங்களாக வைரலாகி வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கின்றனர்.

ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜன் தனக்கு காதலர் தினத்தில் கொடுத்த கிப்ட் என்று ஒரு போஸ்ட் போட அது இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு ஸ்ருதி ரங்கராஜன் மாதம்பட்டியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதனால் அவரைப் பற்றிய வதந்திகளுக்கு மனைவியே பதிலடி கொடுத்து விட்டார் என்று கூறி வந்தனர்.
ஸ்ருதி போஸ்ட் போட்டு சில வாரங்களிலேயே தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கும் திருமணமாகிவிட்டது என்றும் தான் இப்போது ஆறு மாதமாக கர்ப்பமாக இருக்கிறேன் என்று ஜாய் போஸ்ட் போட, அது பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியது. அதற்கு பிறகு ஜாய்க்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. திருமணமாகி விவாகரத்து பெற்று இருந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை திருமணம் செய்து குழந்தை கொடுத்து ஏமாற்றி சென்று விட்டார் என்று ஜாய் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரங்கராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஜாய்யுடன் நடந்த திருமணம் மிரட்டலின் பெயரில் நடந்தது, அவருடைய குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து அது என்னுடையது என்று நிரூபணம் ஆனால் நான் அந்த குழந்தையை ஆயுசு முழுக்க கவனித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அறிக்கை வெளியிட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது, இன்னும் டிஎன்ஏ டெஸ்ட்க்கு மாதம்பட்டி ரங்கராஜன் வரவில்லை என்று ஜாய் போஸ்ட் போட்டு ரங்கராஜனை கலாய்த்து கொண்டிருக்கிறார்.

அதோடு என் புருஷனை எங்கேயாவது பார்த்தீர்கள் என்றால் எனக்கு டிஎம் பண்ணுங்க என்று கூட ஸ்டோரி வைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜன் தனக்கு பர்சனலாக அனுப்பிய வீடியோக்கள் என்று சில வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது இன்று instagram பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவி ஸ்ருதி மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதே பதிவை மாதம்பட்டி ரங்கராஜனும் ரீ ஷேர் செய்து இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications