மனைவியை நினைத்து உருக்கமாக பதிவிட்ட மதுரை முத்து...ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: மதுரை முத்து தன்னுடைய மனைவியின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியை கண்ணீரோடு பதிவிட்டுள்ளார்.
மதுரை முத்துவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

மதுரை முத்துவின் சோகமான கதை
பொதுவாக எப்போதும் அடுத்தவர்களை சிரிக்க வைப்பவர்கள் எல்லாம் மனதிற்குள்ளே அதிகமாக சோகங்களையும், துயரங்களையும் சுமந்து கொண்டிருப்பவர்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்று பலரும் கூறுவார்கள். அந்த வகையில்தான் பல காமெடி நடிகர்களின் வாழ்க்கை இருந்து வருகிறது. அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி யாரும் அதில் விதிவிலக்கல்ல என்று பலருடைய வாழ்க்கை அனைவருக்கும் உணர்த்தி வருகிறது. அந்த வகையில்தான் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் அனைவரையும் சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் வாழ்க்கையும் இருந்து வருகிறது.

வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய இழப்பு
மதுரை முத்துவின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டார். சம்பவ இடத்திலேயே இவர் இறந்து விட்டது மதுரை முத்துக்கு மட்டுமல்லாமல் அவருடைய இரு குழந்தைகளுக்கும் பெரிய அதிர்ச்சி தான். மதுரை முத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் திடீரென்று அவருடைய மனைவியின் இழப்பு அவருடைய வாழ்க்கையில் பெரிய அளவில் சோகத்தையும் துயரத்தையும் கொடுத்துள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு இருந்தாலும் தற்போது வரைக்கும் தன்னுடைய குழந்தைகளை பாசமாகவும் ஜாலியாகவும் வளர்த்து வருகிறார்.

வலைத்தள பதிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இவருடைய காமெடியை ரசிகர்கள் பலர் ரசித்து வந்தாலும் தன்னுடைய பட்டிமன்ற பேச்சாள் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவர் பேசும் பேச்சுகள் டைமிங் காமெடி ஆக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக் கவலையை மறந்து வாய் விட்டு சிரித்து வருகிறார்கள். என்னதான் இவர் அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாலும் இவருடைய சொந்த வாழ்க்கையில் சொல்லப்படாத சோகங்கள் இருந்து வருகிறது என்பதை தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரியப்படுத்தி இருக்கிறார்.

உருக்கமான பதிவு
மதுரை முத்துவின் மனைவியின் இறப்புக்குப் பிறகு குழந்தைகளோடு இவர் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தாலும் தற்போது தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு எங்கள் வீட்டின் தெய்வத்திற்கு ஆறாம் ஆண்டு அஞ்சலி என்று பதிவிட்டு, என்றும் நினைவுகளுடன் மதுரை முத்து மற்றும் யாழினி ஸ்,ரீ முத்துரா ஸ்ரீ மற்றும் குடும்பத்தினர் என்று உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். எங்களை சிரிக்க வைத்த நீங்கள் கண்கலங்கிய நாள் என்று உருக்கமான ஆறுகளை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications