மனைவியை நினைத்து உருக்கமாக பதிவிட்ட மதுரை முத்து...ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: மதுரை முத்து தன்னுடைய மனைவியின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியை கண்ணீரோடு பதிவிட்டுள்ளார்.
மதுரை முத்துவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

மதுரை முத்துவின் சோகமான கதை
பொதுவாக எப்போதும் அடுத்தவர்களை சிரிக்க வைப்பவர்கள் எல்லாம் மனதிற்குள்ளே அதிகமாக சோகங்களையும், துயரங்களையும் சுமந்து கொண்டிருப்பவர்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்று பலரும் கூறுவார்கள். அந்த வகையில்தான் பல காமெடி நடிகர்களின் வாழ்க்கை இருந்து வருகிறது. அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி யாரும் அதில் விதிவிலக்கல்ல என்று பலருடைய வாழ்க்கை அனைவருக்கும் உணர்த்தி வருகிறது. அந்த வகையில்தான் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் அனைவரையும் சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் வாழ்க்கையும் இருந்து வருகிறது.

வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய இழப்பு
மதுரை முத்துவின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டார். சம்பவ இடத்திலேயே இவர் இறந்து விட்டது மதுரை முத்துக்கு மட்டுமல்லாமல் அவருடைய இரு குழந்தைகளுக்கும் பெரிய அதிர்ச்சி தான். மதுரை முத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் திடீரென்று அவருடைய மனைவியின் இழப்பு அவருடைய வாழ்க்கையில் பெரிய அளவில் சோகத்தையும் துயரத்தையும் கொடுத்துள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு இருந்தாலும் தற்போது வரைக்கும் தன்னுடைய குழந்தைகளை பாசமாகவும் ஜாலியாகவும் வளர்த்து வருகிறார்.

வலைத்தள பதிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இவருடைய காமெடியை ரசிகர்கள் பலர் ரசித்து வந்தாலும் தன்னுடைய பட்டிமன்ற பேச்சாள் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவர் பேசும் பேச்சுகள் டைமிங் காமெடி ஆக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக் கவலையை மறந்து வாய் விட்டு சிரித்து வருகிறார்கள். என்னதான் இவர் அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாலும் இவருடைய சொந்த வாழ்க்கையில் சொல்லப்படாத சோகங்கள் இருந்து வருகிறது என்பதை தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரியப்படுத்தி இருக்கிறார்.

உருக்கமான பதிவு
மதுரை முத்துவின் மனைவியின் இறப்புக்குப் பிறகு குழந்தைகளோடு இவர் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தாலும் தற்போது தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு எங்கள் வீட்டின் தெய்வத்திற்கு ஆறாம் ஆண்டு அஞ்சலி என்று பதிவிட்டு, என்றும் நினைவுகளுடன் மதுரை முத்து மற்றும் யாழினி ஸ்,ரீ முத்துரா ஸ்ரீ மற்றும் குடும்பத்தினர் என்று உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். எங்களை சிரிக்க வைத்த நீங்கள் கண்கலங்கிய நாள் என்று உருக்கமான ஆறுகளை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications