Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியை விவாகரத்து செய்யாமல் என்னை கர்ப்பமாக்கினார்! மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் நீதிமன்றத்தில் புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, பிரபல சினிமா ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டா, சென்னை உயர்நீதிமன்றத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது மனைவியை விவாகரத்து செய்யாமல், தன்னை ஏமாற்றி உறவு கொண்டதாகவும், அதன் மூலம் தான் கர்ப்பமானதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி திரையுலகிலும், சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mathampatti Rangaraj vijay tv

எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டு

இந்த வழக்கு முதலில் மாதம்பட்டி ரங்கராஜனின் நிறுவனத்தால் தொடுக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ஜாய் கிரிசில்டா அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு, நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அந்த நிறுவனம் குற்றம்சாட்டியது. இதற்குப் பதிலளித்த ஜாய் கிரிசில்டா, தனது பதிவுகள் தனிப்பட்ட விமர்சனங்கள் என்றும், ரங்கராஜின் செயல்களிலிருந்து நிறுவனத்தைப் பாதுகாக்கவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

ஜாய் கிரிசில்டா தனது மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் மூலமாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், ரங்கராஜ் தனது மனைவியிடமிருந்து சட்டபூர்வமாகப் பிரிந்துவிட்டதாகக் கூறி தன்னுடன் பழகத் தொடங்கியதாகத் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பொதுவான நண்பர் மூலமாக இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும், அப்போது ரங்கராஜ், தான் தனிமையில் வாழ்வதாகவும், ஜாயை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியதாகத் தெரிவித்தார்.

உறவும், ஏமாற்றமும்

ஜாய் கிரிசில்டா தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, 2023 டிசம்பர் 24 அன்று ரங்கராஜை திருமணம் செய்துகொண்டதாகவும், அந்தத் திருமணத்தில் அவரது நண்பர்களும், ஊழியர்களும் கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு, ரங்கராஜ் தன்னை இரண்டு முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் ஜாய் குற்றம்சாட்டினார். மூன்றாவது முறையாக அவர் கர்ப்பமடைந்தபோது, ரங்கராஜ் தன்னைத் தாக்கியதாகவும், அதன்பிறகு அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான், ரங்கராஜ் இன்னும் தனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பது ஜாய் கிரிசில்டாவுக்குத் தெரிய வந்தது என்று இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

நீதிமன்றத்தின் நிலைப்பாடு

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ரங்கராஜ் தனது தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்குமாறு கோரி ஒரு தனி வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். ஜாய் கிரிசில்டாவின் வழக்கறிஞர், இந்த வழக்கு சட்டப்படி செல்லாது என்றும், ரங்கராஜ் தரப்பு வழக்கைத் தவிர்ப்பதற்காகப் போலியான காரணங்களைக் கூறுவதாகவும் வாதிட்டார்.

நீதிபதி என். செந்தில்குமார், இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க முடிவு செய்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+