ஜாய் கிரிஸ்டில்லாவிற்கு குழந்தை பிறந்தது! மாதம்பட்டி ரங்கராஜ் போட்டோவுடன் வெளியிட்ட மகிழ்ச்சி போஸ்ட்
சென்னை: தமிழ் திரையுலகிலும், சமையல் உலகிலும் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜெய் கிரிஸ்டில்லா (கிரிசால்டா) உடனானத் தனதுத் தனிப்பட்ட உறவு குறித்தப் பல சர்ச்சைகளுக்கு மத்தியில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். ஜாக்கிரி ஸ்டில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று பகிர்ந்து இருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பின்னணி
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், தனதுத் தனித்துவமான சமையல் மற்றும் கேட்டரிங் தொழிலால் பிரபலமானார். விஜய் டிவியின் சமையல் நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி'யில் நடுவராகக் கலந்து கொண்டதன் மூலம், இவர் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது ஒருசிலப் படங்களிலும் நடித்து வருகிறார்.

குடும்பப் பின்னணி
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே முதல் மனைவி ஸ்ருதி மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லாவுடன் ஏற்பட்டத் திருமணம் மற்றும் உறவுச் சிக்கல்களால் அவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
திருமண உறவு சிக்கல்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஜாய் கிறிஸ்டில்லா ஏற்கனவேப் புகார் அளித்திருந்தார். மேலும், ஜீவனாம்சம் கேட்டு அவர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார். இந்தக் குடும்பப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஜாய் கிறிஸ்டில்லாவிற்க்கு என்று குழந்தை பிறந்து இருக்கிறது
ராகா ரங்கராஜின் வருகை!
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே முதல் மனைவி ஸ்ருதி மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது ஜாய் கிறிஸ்டில்லா மூலமாகவும் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஜாய் கிறிஸ்டில்லா, குழந்தை பிறப்பதற்கு முன்பே, தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிறக்கப் போகும் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் (Raha Rangaraj) என்றுப் பெயர் சூட்டவிருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.
தற்போது ராகா ரங்கராஜ் இந்தத் தம்பதியின் வாழ்க்கையில் நுழைந்திருக்கும் நிலையில், ஜாய் கிறிஸ்டில்லா இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். "மாதம்பட்டி ரங்கராஜும் நானும் ஒரு ஆண் குழந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்" என்று அவர் வெளியிட்டிருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தற்போது குழந்தை பிறந்திருக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் இந்தத் தனிப்பட்ட உறவுச் சிக்கல்கள் எவ்வாறுத் தீர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும், ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கும் கிறிஸ்டில்லா மற்றும் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ராகா ரங்கராஜுக்குப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications