மீனாட்சி பொண்ணுங்க: தற்கொலைக்கு முயலும் யமுனா, மீனாட்சி எடுத்த முடிவு..வேகம் எடுத்த கதை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் டிசம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த வகையில் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் யமுனா இருவரும் கோவிலில் சந்தித்து கொள்வதை பார்த்த யமுனா அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதவாது, இவை அனைத்தும் ரங்கநாயகி, பூஜா மற்றும் கோகிலா ஆகியோரின் கூட்டு சதி என்பதை அறியாத யமுனா கோவிலில் வைத்து கார்த்திக்கிடம் சத்தம் போடுகிறாள். இதனால் கார்த்திக் கோபமாகி யமுனாவை பிடித்து தள்ளி விட்டு அங்கிருந்து வெளியேற அதை பார்த்து ரங்கநாயகி, பூஜா ஆகியோர் சந்தோஷமடைகின்றனர்.

அடுத்ததாக வீட்டிற்கு வரும் யமுனா இரவில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். மீனாட்சியும் துர்காவும் அவளை காப்பாற்றுகிறார்கள். பிறகு மீனாட்சி யமுனாவிடம் என்னாச்சு என்ற விசாரிக்க யமுனா, கார்த்திக் வேறு பெண்ணுடன் சுற்றுகிறான் என்று நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்ல, இதை கேட்டு அதிர்ச்சி அடையும் மீனாட்சி நான் இதை சரிசெய்கிறேன் என்று சொல்கிறாள்.
ஏற்கனவே பூஜாவை சக்தி வீட்டிற்குள் இருந்து பழிவாங்கி வரும் நிலையில் இனி யமுனா வாழ்க்கையை கெடுக்க ரங்கநாயகி, பூஜா மற்றும் கோகிலா செய்யும் கூட்டு சதியை முறியடித்து மீனாட்சியோடு சேர்ந்து சக்தியும் உண்மையை வெளிக்கொண்டு வருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications