காரில் பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ண நடிகர் முரளி.. அந்த நடிகை மீது ஆசையா? டேனியல் பாலாஜி செம: பிரபலம்
சென்னை: பிரபல நடிகர் முரளி தன்மையான குணம் கொண்டவர், மிகவும் நல்லவர், அனைவருக்கும் மரியாதை தந்து பேசக்கூடிய மனிதர் என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.. அத்துடன், நடிகர் டேனியல் பாலாஜிக்கு, நடிகர் முரளி சினிமா வாய்ப்புகளுக்கு உதவி செய்யாதது ஏன் என்பது குறித்தும் தன்னுடைய கருத்தை சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "நடிகர் முரளியின் தீவிர ரசிகர் ஒருவர் "கடவுள் முரளி வாழ்க" என்று சுவரெல்லாம் எழுதி கொண்டேயிருந்தார்.. சென்னை வளரசவாக்கம் பகுதியில் உளள சுவற்றில் எழுதப்பட்டிருந்ததை நானே பலமுறை பார்த்திருக்கிறேன்.

முரளியின் அப்பா கன்னடத்தில் பிரபலமான டைரக்டர்.. தன்னுடைய அப்பாவிடமே அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து பணியாற்றினார். பிறகு அப்பாவின் படத்திலேயே முரளி நடிக்க துவங்கினார்.. அந்த நேரம் பார்த்து, கே.பாலச்சந்தர் தயாரிப்பில் பூவிலங்கு என்று அமீர்ஜான் டைரக்ஷனில் படம் தயாராகி கொண்டிருந்தது. கன்னட படத்தில் முரளியை பார்த்ததுமே, அமீர்ஜானுக்கு பிடித்துப்போய்விட்டது. அப்படித்தான் பூவிலங்கு என்ற படத்தில் அறிமுகமானார்.
முரளிக்கு நடந்த திருமணம்
பெங்களூரில் காலேஜில் படித்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முரளி காதலித்து கொண்டிருந்தார். ஆனால், பெற்றோர்கள் தரப்பில் இவர்களது திருமணத்துக்கு சம்மதம் கிடைக்கவில்லை. ஒருநாள் திடீரென காரிலேயே அந்த பெண்ணை கடத்தி வந்து, இங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டார்..
எஸ்பிபி-யும் இப்படித்தான் மனைவியை கடத்தி வந்து திருமணம் செய்தார். எஸ்பிபி தம்பதியினர் இருவரும் பிராமணர்கள் என்றாலும், கோத்திரம் இருவருக்கும் மாறுபட்டது.. இதனால் திருமணத்துக்கு தடை ஏற்படவும், நண்பர்கள் உதவியுடன் மனைவியை கடத்தி வந்து முறைப்படி திருமணம் செய்தார் எஸ்பிபி.
ரிஸ்க் எடுத்து திருமணம்
அதுபோலவே முரளியும், தன்னுடைய காதலியை கடத்தி வந்துதான் திருமணம் செய்தார்.. வேறொரு வழியாக சென்றால், அகப்பட்டுக் கொள்வோம் என்று, கோவா வழியாக காரில் சுற்றிக்கொண்டுவந்துள்ளனர். இவர்கள் திருமணத்துக்கு பிறகு, 2 குடும்பத்திலும் தம்பதியை ஏற்றுக் கொண்டனர். முரளியும் திருமணத்துக்கு பிறகு, வளசரவாக்கத்தில் வீடு வாங்கி கட்டி, மனைவியை சிறப்பாக வாழ வைத்தார்.
காதல் - மதுப்பழக்கம்
மது அருந்திவிட்டால் நிறைய பேர் இயல்பையே மறந்துவிடுவார்கள்.. மணிக்குயில் பட ஷுட்டிங்கில் சிவரஞ்சனியை காதலிக்க துவங்கிவிட்டார்.. இத்தனைக்கும் முரளிக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். ஆனால், சிவரஞ்சனி அந்த காதலை நிராகரித்துவிட்டார். அந்த நேரத்தில், முரளி நிறைய மது அருந்தி, ஷூட்டிங்கில் சில இடர்பாடுகளும் ஏற்பட்டன. புதுபுது ஹீரோக்கள் வரும்போது, முரளிக்கான படவாய்ப்புகளும் ஒருகட்டத்தில் குறைந்து போனது. டேனியல் பாலாஜி முரளியின் தம்பிதான் என்றாலும், அவரை கை தூக்கிவிடவிவில்லை.. அஜித், தன்னுடைய மச்சான் ரிச்சர்டுக்கும் கை கொடுக்கவில்லை.. விஜய் தன்னுடைய தம்பி விக்ராந்த்துக்கும் கை தூக்கிவிடவில்லை. தங்கள் குடும்பத்தினருக்கு உதவி செய்தால், அதையும் சிலர் விமர்சிப்பார்கள் என்பதால், உதவிகளை செய்யாமல் இருந்திருக்கலாம் .. ஆனால், முரளி மிகவும் நல்லவர், தன்மையான குணம் கொண்டவர் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications