Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு பெரிய சர்ச்சையாக மாறியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது விமர்சனம் செய்யும் போது, தேவையில்லாமல் நடிகை நயன்தாரா பெயரை இழுத்தது சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த விவகாரத்தில், "நயன் கண்டிப்பாக பதில் கொடுப்பார்" என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த மாதிரி நேரடி கண்டனம் அல்ல... வேற மாதிரி ஒரு பதிலை தான் அவர் தேர்வு செய்திருக்கிறார்.

Nayanthara C V Shanmugam Tamil cinema

நேரடி வார்த்தை இல்லை

சமூக வலைதளங்களில் எப்போதுமே அளவான பதில்களை மட்டுமே கொடுக்கும் நயன்தாரா, இந்த முறை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சின்ன வரி மட்டுமே பதிவிட்டுள்ளார்.

"மழை எங்கு, யார் மீது விழுகிறது என்று பார்க்காது... அப்படியே உங்கள் அன்பும் இருக்க வேண்டும்" என்ற அந்த வரி தான் இப்போது பெரிய பேச்சாகி இருக்கிறது. இந்த ஒரு வரியை பார்த்த ரசிகர்கள், "இது சாதாரண quote இல்ல... நேரடியாக சொல்லாமல் கொடுத்த பதில்" என்று புரிந்து கொண்டுள்ளனர்.

திரிஷா போல நேரடி பதில் இல்லை... ஏன்?

சமீபத்தில் திரிஷா கிருஷ்ணன் குறித்து அரசியல் பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையானபோது, திரிஷா உடனடியாக பதிலடி கொடுத்தார். அதன் பிறகு நயினார் நாகேந்திரன் மன்னிப்பும் கேட்டார். அதை ஒப்பிடும்போது, நயன்தாரா எடுத்திருக்கும் இந்த அணுகுமுறை ரொம்ப வேற மாதிரி. "எதுக்கும் ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியமே இல்லை" என்ற ஸ்டைலில் தான் அவர் இருக்கிறார் என பலர் கூறுகின்றனர்.

ரசிகர்கள் கருத்து

நேரடியாக யாரையும் குறிப்பிடாமல், எந்த வார்த்தையிலும் தாக்காமல்... ஒரு மென்மையான மெசேஜ் மூலம் பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

"அவரை பற்றி யாராவது பேசினாலும், அவர் அந்த லெவலுக்கு இறங்க மாட்டார்"
"நயன் ஸ்டைல் இதுதான்... சத்தமில்லாமல் சொல்லி விடுவார்" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Nayanthara C V Shanmugam Tamil cinema

விக்னேஷ் சிவன் அமைதி

இந்த விவகாரத்தில் விக்னேஷ் சிவன் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இதுவும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதே நேரத்தில், குஷ்பு சுந்தர் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். "நடிகைகள் விவாதத்திற்கு பொருள் அல்ல" என்ற அவரது கருத்து, இந்த சர்ச்சைக்கு நேரடி பதிலாகவே பார்க்கப்படுகிறது.

இன்னும் அடங்காத சர்ச்சை

நடிகர் சங்கம் உட்பட பல தரப்பில் இருந்து கண்டனங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சி.வி. சண்முகம் பேச்சு இன்னும் விவாதத்தில் தான் உள்ளது. பொதுவாக ஒரு சர்ச்சைக்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கிறது. ஒரு பக்கம் நேரடி எதிர்ப்பு, மற்றொரு பக்கம் அமைதியான சைகை. அதில் நயன்தாரா எடுத்திருப்பது இரண்டாவது வழி. "சொல்லாமல் சொல்வது" - அதுதான் இந்த முறை நயனின் பதிலடி. இந்த ஒரு பதிவு மட்டும் போதும்... அவர் என்ன சொல்ல வருகிறார் என்று ரசிகர்கள் புரிந்து கொள்ள என்று பலரும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+